K U M U D A M   N E W S

விளையாட்டு

ஆசியக் கோப்பை: இந்திய அணி விலகல்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக அறிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதால் விலகுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மீண்டும் வைரலாகும் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.. என்ன காரணம்?

விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தடகள வரலாற்றில் புதிய சாதனை.. முதல் முறையாக 90 மீட்டர் தாண்டிய நீரஜ் சோப்ரா!

இந்திய ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பார்முக்கு திரும்பிய பிரக்ஞானந்தா: சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்று அசத்தல்!

கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.

வான்கடேவில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட் திறப்பு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்ட், மஹாராஷ்டிரா முதல்வர் ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஸ்டாண்ட் திறப்பு விழா நிகழ்ச்சியில் ரோகித் ஷர்மா குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

இராணுவத்தில் உயர்பதவி.. கெளரவ லெப்டினன்ட் கர்னலாகிறார் நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில், கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்கில் வேலை.. 2 மகள்கள்.. பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பெண்!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் தமிழகப் பெண்.

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? அஸ்வினின் விருப்பம் இவரா?

ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து அறிவித்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்கிற விவாதம் எழுந்துள்ளது.

மேக்ஸ்வெல்லுடன் தொடர்புபடுத்தி பேசிய ரசிகர் - கடுப்பான ப்ரீத்தி ஜிந்தா

சமூக வலைதளத்தில் பஞ்சாப் அணி வீரர் கிளென் மேக்ஸ்வெலுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசிய ரசிகருக்கு நடிகையும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரித்தி ஜிந்தா கோபமாக பதிலளித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...விராட் கோலியின் முடிவுக்கு இது தான் காரணமா?

நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன் என விராட் கோலி உருக்கம்