எடப்பாடி சுயமாக சிந்திப்பவர்.. நல்ல முடிவெடுப்பார்: அப்பாவு பேட்டி
”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
"அதிமுக- பாஜக கூட்டணி தோற்கடிக்க வேண்டும் என்பது இலக்கு. அதேபோல் கூடுதல் தொகுதி கேட்பதும் நியாயமான விருப்பம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தினார்.
த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையினை கிளப்பிய நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்.
”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
வரப்போகிற சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குமுதம் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். அன்றைய தினம் களத்தில் உள்ள 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.
புதிய கல்விக் கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவரும் திருக்குறளும் இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், திருக்குறள் சனாதனத்திற்கும் புதிய கல்விக்கொள்கையும் நேரெதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.