K U M U D A M   N E W S

அரசியல்

ஓடிபி ஏன் கேட்குறீங்க? திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரச்சாரத்திற்கு சிக்கல்

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஓடிபி (OTP) பெற இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

கந்துவட்டியும் கிட்னி திருட்டும்.. அண்ணாமலை சந்தேகம்

விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களைக் கந்து வட்டிக்கு உள்ளாக்கி, பின்னர் கிட்னி திருட்டு கும்பலிடம் சிக்கவைக்கப்பட்டார்களா? என்று சந்தேகம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா- அதிமுகவினர் ஷாக்!

அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் போன்ற கட்சிகளை தடை செய்ய வேண்டும்- கிருஷ்ணசாமி

“கள் உள்ளிட்ட மது போதை பொருட்களுக்கு ஆதரவு தரும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்தால்தான் மக்கள் மத்தியில் போதைப்பழக்கம் இல்லாமல் போகும்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

குப்பை மேடாக மாறிவரும் தமிழக மாநகரங்கள்- நயினார் நாகேந்திரன்

குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து’- ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

“திமுக பாடி போன லாரி, டயர் போன பேருந்து. இதனால் அந்த வண்டி ஓட வாய்ப்பு இல்லை” என்று முன்னாள் மைச்சார் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளளார்.

அவர்களது பெயரை உச்சரிக்க விரும்பவில்லை- அமைச்சர் சேகர்பாபு

“பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.

அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது- அண்ணாமலை பேட்டி

“அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அமித்ஷா - இபிஎஸ் எடுக்கும் முடிவே இறுதியானது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது- சீமான் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு ஒரு ஒழுங்கற்ற கூட்டத்திடம் உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.

குற்றம் சாட்டியவர்களையே பணிநீக்கம் செய்யும் திமுக அரசு- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதோடு, அவ்வாறு குற்றம் சாட்டியவர்களையே திமுக அரசு பணிநீக்கம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.