மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற போவது யார்..? எகிறும் எதிர்பார்ப்பு
மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
மகராஷ்டிரா-ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
வயநாடு மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
மகராஷ்டிரா தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 28 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மகராஷ்டிராவில் 220 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் இந்தியா கூட்டணியில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா முன்னிலை வகித்து வருகிறது.
வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் நிலையில் 9 மணி முதல் முன்னிலை நிலவரம் வெளியாகும்.
ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர் ஒருவருடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.