K U M U D A M   N E W S
Kumudam Ad

இந்தியா

India Pakistan War : இந்தியா, பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட முடியாது - அமெரிக்க துணை அதிபர்

India Pakistan War Update : இந்தியாவில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் சூழலில், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழலில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் விடிய விடிய தாக்குதல்... முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு!

பாகிஸ்தான் தலைநர்கர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து இந்திய ராணுவம் விடிய விடிய தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு-இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது

கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ்...தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை

கேரளாவில் மீண்டும் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அப்பாவி மக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் போர் பதற்றம்- மே 10 வரை 27 விமான நிலையங்கள் மூடல்

ஆபரேஷன் சிந்தூரினைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலுள்ள 27 விமான நிலையங்களை வருகிற மே 10 ஆம் தேதி,அதிகாலை 5:29 வரை வர மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

போர் பாதுகாப்பு ஒத்திகை...இருளில் மூழ்கியது டெல்லி

போர் பாதுகாப்பு ஒத்திகை காரணமாக டெல்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு...மத்திய அரசு உத்தரவு

மே 2023ல் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பொறுப்பை பிரவீன் சூட் ஏற்றுக்கொண்டார்.

இந்தியா, இஸ்ரேலை பின்பற்ற வேண்டும் – பவன் கல்யாண்

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர்: பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.