K U M U D A M   N E W S

இந்தியா

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

அகமதாபாத்தில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இறந்து விட்டதாக நினைத்தேன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய நபர் பேட்டி

முதலில், தான் இறந்துவிட்டதாக நினைத்ததாகவும், தான் உயிருடன் இருப்பதை நம்பமுடியவில்லை என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர்தப்பிய விஷ்வாஷ்குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட பெண்.. நூலிழையில் உயிர் தப்பினார்

அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த பூமி சௌகான் என்ற பெண், விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை - 131வது இடத்திற்கு சரிந்த இந்தியா!

உலக பொருளாதார கூட்டமைப் பின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் 131-வது இடத்திற்கு சென்றது இந்தியா. மொத்தம் 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 2 இடங்கள் சரிந்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்து : குஜராத் முன்னாள் முதலமைச்சர் உயிரிழப்பு..!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபாணி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து.. 242 பயணிகளுடன் நிலை என்ன?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்டஏர் இந்தியாவின் AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வண்டி எப்படி திரும்பும்? 90 டிகிரி வளைவில் மேம்பாலம்.. எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது முதல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேம்பால பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடலில் மூழ்கிய எல்சா 3 சரக்கு கப்பல்: உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு!

எல்சா 3 சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்து தொடர்பாக, கேரளா ஃபோர்ட் கொச்சி கடலோர காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கப்பல் உரிமையாளர் முதல் குற்றவாளியாகவும், கப்பல் மேலாளர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இனி ஆதார் கட்டாயம்.. ரயில்வே வெளியிட்ட புதிய அறிவிப்பு..!

IRCTC கணக்குடன் கட்டாயம் ஆதாரை இணைக்க ரயில்வே அறிவுறுத்தியுள்ள நிலையில், ஜூலை 1 முதல் ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரள கடலில் தீப்பிடித்த சிங்கப்பூர் கப்பல்.. வெடித்துச்சிதறும் அபாயம்..!

கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் வான்ஹாய் 503 என்ற சரக்குக் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.