K U M U D A M   N E W S

மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்.. நில தகராறில் வீட்டிற்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி அருகே சின்னபாறையூர் கிராமத்தில் நிலத்தகராறில் தம்பியை வெட்டிக்கொண்ற அண்ணன், வீட்டிற்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

'காங்கிரசில் இருந்து வெளியேறுங்கள்.. இல்லையென்றால்..' பஜ்ரங் புனியாவுக்கு கொலை மிரட்டல்!

ஹரியானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத்துக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பஜ்ரங் புனியாவுக்கு கட்சியில் விவசாயிகள் பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று சிலைகள் கரைப்பு

ராமநாதபுரம் பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று சிலைகள் கரைத்த பக்தர்கள்

"நடிகர் சங்க கடனை அடைக்க Rajini Sir கொடுத்த ஐடியா"

நடிகர் சங்க கடனை அடைக்க நடிகர் ரஜினி கொடுத்த ஐடியா பற்றி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார் நடிகர் கார்த்தி

விஜய்யால் நல்லது நடந்தால் சந்தோசம்.. மாநாட்டில் எதிர்பார்க்கிறேன் - துரை வைகோ

கட்சியின் நிலைப்பாட்டை மாநாட்டில் விஜய் நல்லபடியாக கூறுவார் என எதிர்பார்க்கிறேன் என்றும் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார்கள் குறித்து மீடியாவில் பேச வேண்டாம் - நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி

பாலியல் புகார்கள் குறித்து மீடியாவில் பேச வேண்டாம் என நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி தெரிவித்துள்ளார்

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக ஊர் திரும்பும் மக்கள். ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி

தோனியின் சாதனையை சமன் செய்த விக்கெட் கீப்பர்.. துலீப் டிராபியில் அபாரம்

துலீப் டிராபி போட்டியின் ஒரு இன்னிங்ஸில், அதிக கேட்சுகள் பிடித்த தோனியின் சாதனையை இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் சமன் செய்துள்ளார்.

'வங்கதேசத்துடன் கிரிக்கெட் விளையாடக்கூடாது'.. திடீரென போர்க்கொடி தூக்கும் இந்தியர்கள்.. என்ன காரணம்?

வங்கதேசத்தில் வன்முறை ஓய்ந்து இயல்புநிலை திரும்பினாலும், 'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்பதுபோல் அங்கு சிறு சிறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் 15 வயது சிறுவன் மர்ம கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டான்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. GST சாலையில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக சென்னை திரும்பும் மக்கள். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - எறும்பு போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

பாலியல் அத்துமீறல்.. 5 ஆண்டுகள் தடை..பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டு தடை என்ற தீர்மானம் உள்பட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

அசாமிப் பெண்ணின் நட்புக் கோரிக்கை - தீரா உலா -6

இந்திய நெடும்பயணத்தின் குறிப்புகளாலான இத்தொடரின் இந்த அத்தியாயம் அசாம் மாநிலம் தேஸ்பூரில் உலவிய அனுபவத்தைக் கூறுகிறது.

'வேட்டையன்' முதல் சிங்கிள் ப்ரோமா.. ரஜினியுடன் 27 ஆண்டுகளுக்கு பிறகு கைகோர்த்த மலேசியா வாசுதேவன்!

சுமார் 30 நொடிகள் ஓடும் ப்ரோமோ வீடியோவில் ‘மனசிலாயோ’ பாடலின் தொடக்க வரிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு விருதே கொடுக்கலாம். ஏனென்றால் பாடல் வரிகளை கேட்க முடியாத அளவுக்கு அனிருத்தின் இசை கொஞ்சம் இரைச்சலாக உள்ளதுபோல் தெரிகிறது. நாளை முழு பாடலை கேட்ட பிறகுதான், ''ஆறுக்கு றென்டற கல்லற வெட்டிக்க மா'' என்ற பாடல் வரிகள் படத்துக்கா இல்லை இந்த பாடலை கேட்பவர்களுக்காக என்பது தெரியும்.

தவெக மாநாட்டிற்கு போலீஸ் விதித்த நிபந்தனைகள் என்ன? வெளியான தகவல்கள்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், காவல்துறை சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

THE GOAT 1000 கோடி டார்கெட்.. சிக்கல்கள் என்ன?

THE GOAT 1000 கோடி டார்கெட்.. சிக்கல்கள் என்ன?

JUSTIN | பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாள் விடுமுறை முடிந்த நிலையில் பொதுமக்கள் சென்னை திரும்புகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

அடுத்த 6 நாட்கள் மழை கொட்டப்போகுது.. குடையை எடுத்து ரெடியா வைங்க மக்களே!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

இந்தியாவில் குரங்கம்மை? வெளிநாட்டில் இருந்து வந்த அந்த நபர்...மத்திய சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு. குரங்கம்மை தானா என உறுதி செய்ய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

“இதை என்னால் மறக்க முடியாது” - ஓய்வை அறிவித்த மொயின் அலி உருக்கம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி அறிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!

இந்த முறை ராகுல் காந்தி அமெரிக்காவில் என்ன பேச போகிறார்? அதற்கு பாஜக என்ன எதிர்வினையாற்ற போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கெனவே அமெரிக்காவில் உள்ளார். இதனால் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் அங்கு சந்தித்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

தவெக-வுக்கு கிடைத்த அங்கீகாரம்.. கொண்டாடி கொளுத்திய தவெக-வினர்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்துக்கொண்டதை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தவெக கட்சியினர்

போலீஸாரை வாழ்த்திய மஹா விஷ்ணு.. சித்தர்கள் சொன்னதால் செய்ததாக வாக்குமூலம்

இரவு உணவு வாங்கிக் கொடுத்த போலீசாரை வாழ்த்திய மஹா விஷ்ணு, சித்தர்கள் கூறியதாலேயே விநாயகர் சதுர்த்தி என்று தெரிந்தும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

"Late -ஆ வந்தாலும் Latest-ஆ இருக்கு.." - முதல்வரின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்திருக்கிறேன். ஆனால் வரவேற்பு Latest-ஆக உள்ளது என சிகாகோவில் நடைபெற்ற தமிழர் கலை நிகழ்ச்சியில் பெருமிதத்துடன் பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

'பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம்'.. நடிகை ரோகிணி பரபரப்பு பேச்சு!

''திரைத்துறையில் நடக்கும் பாலியல் புகார்கள் குறித்து ஊடகங்களிடம் பேச வேண்டாம். பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க 2019ம் ஆண்டே கமிட்டி அமைக்கப்பட்டது'' என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.

''தர்மபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளை அரசு எப்போது புரிந்துகொள்ளும்..?'' - அன்புமணி ராமதாஸ் கேள்வி

நீர் பிரச்சனை குறித்து தர்மபுரி மாவட்ட மக்களின் உணர்வுகளை அரசு எப்போது புரிந்துகொள்ளும் என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்