K U M U D A M   N E W S

ஆன்மிகம்

இந்தியாவிலேயே வேறு எங்கும் நடக்காத நிகழ்வு.. ஹரிஹரன் சந்திப்பு கோலாகலம்

பொன்னேரியில் நடைபெற்ற ஹரிஹரன் சந்திப்பு பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செல்லியாண்டி அம்மன் கோயில் திருவிழா.. ஆண்கள் மட்டும் செலுத்தும் நேர்த்திகடன்

மூன்று நாட்கள் செல்லியாண்டி அம்மன் கோயிலில் தங்கி விரதம் இருந்த ஆண் பக்தர்கள் மட்டுமே 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

ரத்த கறையுடன் அம்மன் அழைப்பு.. ஊட்டியில் பக்தர்கள் வினோத வழிபாடு

ஊட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் - காளியம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு வழிபாடு மேற்கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி, மருதமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் – குவிந்த பக்தர்கள்

பொது வழியில் மற்றும் 100 ரூபாய் கட்டண வழியில் மூலவரை தரிசிக்க, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கோலாகலம்!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான விழா ஏப்ரல் 2ம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையார் கோயில்: ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை.. பக்தரின் செயலால் நெகிழ்ச்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் வைரக்கல், பச்சைக்கல், மரகத பச்சை ஆகியவற்றினால் ஆன தங்க ஆபரணங்களை பக்தர் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கபாலீஸ்வரர் கோயில் கோலாகலமாக தொடங்கிய தேரோட்டம்.. அரோகரா கோஷங்களுடன் தேரை இழுத்த பக்தர்கள்!

சென்னையில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கூடி அரோகரா கோஷங்களுடன் தேரை வட்டம் பிடித்து இழுத்தனர்.

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா.. உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு நூதன முறையில் நேர்த்தி கடன்

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு நூதன முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

96 அடி உயரம். 350 டன் எடை.. கோலாகலமாக தொடங்கியது திருவாரூர் ஆழித் தேரோட்டம்..!

உலகப் புகழ் பெற்ற 96 அடி உயரமும், 350 டன் எடையளவும் கொண்ட திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் 2000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பங்குனி திருவிழா.. இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.