தமிழ்நாடு

“செர்பியாவில் சரியாக உணவு கிடைக்கவில்லை”- போட்டியில் பதங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்கள் ஆதங்கம்

பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்

 “செர்பியாவில் சரியாக உணவு கிடைக்கவில்லை”- போட்டியில் பதங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்கள் ஆதங்கம்
செர்பியாவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கத்துடன் நாடு திரும்பி வீரர்கள்
பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ மாணவிகள் அசத்தல்

செர்பியாவில் ஏப்ரல் 4 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்ற ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் என்று அழைக்கப்படும் பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று சொல்லப்படும் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 55 நாடுகளில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் டான்ஸ் மற்றும் தற்காப்பு கலையான வாக்குவாண்டா என்ற போட்டியில் பங்கேற்றனர்.இதில் 6 வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியது. மேலும் ஒட்டுமொத்தமாக இந்தியா ஐந்தாம் இடத்தை பெற்றது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கி இருந்தார். இதனைத்தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த வீரர் வீராங்கனைகளுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக வரவேர்த்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது, செர்பியாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றதில் வாக்குவாண்டா என்ற தற்காப்பு கலையில் நான்கு வெள்ளி பதக்கங்களும், டான்ஸ் போட்டியில் இரண்டு வெள்ளி பழக்கங்களும் பெற்று இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர். மேலும் செர்பியாவில் உணவு முறைகள் மட்டும் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை. இந்திய உணவுகள் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வெல்வது லட்சியம் என்றும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து பேசிய பயிற்சியாளர்கள் தமிழக அரசிற்கும், தமிழக விளையாட்டு துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.