தமிழ்நாடு

தாய்க்கு பிரியாணி வாங்கிவந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!

பக்ரீத் பண்டிகை அன்று தாய்க்கு பிரியாணி வாங்க கொண்டு வீடு திரும்பிய சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்க்கு பிரியாணி வாங்கிவந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!
Accident at Uthukottai
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த தாமரைக்குப்பம் பகுதியைச் சேர்த்த காசிம் என்பவரது மகன் முகமது அயூப் (வயது 16), பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று மாலை தனது தாய்க்கு பிரியாணி வாங்க கடைக்கு சென்றுள்ளார். இவர் ஊத்துக்கோட்டையில் இருந்து தாமரைக்குப்பம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகன எதிர்ப்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயமடைந்தார்.

எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும், சிறுவனை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக, ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பக்ரீத் பண்டிகை அன்று தனது தாய்க்கு ஆசையாக பிரியாணி வாங்கிச் சென்ற சிறுவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படும் சம்பவம் அவ்வப்போது நிகழ்கிறது. இதனால், சாலை விதிகளை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க பெற்றோருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.