சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் 26-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் ரவுடி ஆகாஷ் என்ற குள்ளபேடா(20). சி.கேட்டகிரி ரவுடியான ஆகாஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த ரவுடி ஆகாஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தண்டையார்பேட்டையில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். நேற்று ஆகாஷ் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த நிலையில் அவரது தாய் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனம் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆகாஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கி கொண்டிருந்த ரவுடி ஆகாஷை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
கடைக்கு சென்ற ஆகாஷ் தாய் ஜெயா சிறிது நேரம் கழித்து, வீட்டிற்கு வந்து பார்த்த போது ஆகாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவுடி ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ரவுடி ஆகாஷை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்ததும் கடந்த 21/4/25 அன்று போலீசார் ஆகாசை குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் கடந்த மாதம் ஆகாஷ் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆகாஷ் ஜாமினில் வெளியே வந்ததை அறிந்து திட்டம் தீட்டி கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ஆகாஷ் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.
வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த ரவுடி ஆகாஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தண்டையார்பேட்டையில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். நேற்று ஆகாஷ் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த நிலையில் அவரது தாய் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனம் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆகாஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கி கொண்டிருந்த ரவுடி ஆகாஷை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
கடைக்கு சென்ற ஆகாஷ் தாய் ஜெயா சிறிது நேரம் கழித்து, வீட்டிற்கு வந்து பார்த்த போது ஆகாஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவுடி ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ரவுடி ஆகாஷை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்ததும் கடந்த 21/4/25 அன்று போலீசார் ஆகாசை குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் கடந்த மாதம் ஆகாஷ் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆகாஷ் ஜாமினில் வெளியே வந்ததை அறிந்து திட்டம் தீட்டி கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ஆகாஷ் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி கும்பலை தீவிரமாக தேடிவருகின்றனர்.