திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு "ஓரணியில் தமிழ்நாடு" பரப்புரைப் பணிகளைப் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது:
பஞ்சப்பூர் பேருந்து நிலையம்:
”திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு, மே 9 அன்று முதலமைச்சரால் திறக்கப்பட்ட ’முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்’, வரும் ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்தப் பேருந்து முனையத்தில் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முனையம் செயல்பாட்டிற்கு வந்த சில நாட்களில் அனைத்துக் கடைகளும் இயங்கத் தொடங்கும்” என்றார்.
மேலும், “சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம் போல செயல்படும். தற்போதைக்கு, தனியார் பேருந்துகள் விரும்பினால் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வரலாம். மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதும், தனியார் பேருந்துகளும் அங்கு வரத் தொடங்கிவிடும். அனைத்து அரசுப் பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்துதான் இயக்கப்படும்” என்றார் அமைச்சர் நேரு.
குப்பைக் கிடங்கு விவகாரம்:
அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாகப் பிரித்து அகற்றும் பணிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நேரு, “பிளாஸ்டிக் கழிவுகளை தனியாகப் பிரித்து அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பிளாஸ்டிக்கை உரமாக மாற்றினோம், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அங்கிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் அனுப்பப்பட்டது. தற்போது, அந்த பிளாஸ்டிக்கை சாலை அமைப்பது உள்ளிட்ட வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாமா? என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும், குப்பைகளை வேறு எங்கும் கொட்ட முடியாத சூழ்நிலையில் அரியமங்கலம் குப்பைக் கிடங்கிலேயே கொட்டி வருகிறோம்” என்றார்.
மகளிர் உரிமைத் தொகை:
மேலும் அமைச்சர் நேரு பேசுகையில், “குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசுதான். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி அந்த திட்டத்தை நிறுத்துவோம்? நிச்சயம் அந்த திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தராத எடப்பாடி பழனிசாமி, நாங்கள் ஆயிரம் ரூபாய் தந்த பின்பு 1,500 ரூபாய் தருவோம் எனப் பேசுகிறார்” என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளைக் கலைக்கப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும், நாங்கள் ஏற்படுத்திய அமைப்பை நாங்களே எப்படி கலைப்போம்? என்றும் பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சப்பூர் பேருந்து நிலையம்:
”திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு, மே 9 அன்று முதலமைச்சரால் திறக்கப்பட்ட ’முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்’, வரும் ஜூலை 16 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்தப் பேருந்து முனையத்தில் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முனையம் செயல்பாட்டிற்கு வந்த சில நாட்களில் அனைத்துக் கடைகளும் இயங்கத் தொடங்கும்” என்றார்.
மேலும், “சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம் போல செயல்படும். தற்போதைக்கு, தனியார் பேருந்துகள் விரும்பினால் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வரலாம். மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தத் தொடங்கியதும், தனியார் பேருந்துகளும் அங்கு வரத் தொடங்கிவிடும். அனைத்து அரசுப் பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்துதான் இயக்கப்படும்” என்றார் அமைச்சர் நேரு.
குப்பைக் கிடங்கு விவகாரம்:
அரியமங்கலத்தில் உள்ள குப்பைக் கிடங்கிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாகப் பிரித்து அகற்றும் பணிகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நேரு, “பிளாஸ்டிக் கழிவுகளை தனியாகப் பிரித்து அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பிளாஸ்டிக்கை உரமாக மாற்றினோம், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அங்கிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் அனுப்பப்பட்டது. தற்போது, அந்த பிளாஸ்டிக்கை சாலை அமைப்பது உள்ளிட்ட வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாமா? என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும், குப்பைகளை வேறு எங்கும் கொட்ட முடியாத சூழ்நிலையில் அரியமங்கலம் குப்பைக் கிடங்கிலேயே கொட்டி வருகிறோம்” என்றார்.
மகளிர் உரிமைத் தொகை:
மேலும் அமைச்சர் நேரு பேசுகையில், “குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசுதான். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி அந்த திட்டத்தை நிறுத்துவோம்? நிச்சயம் அந்த திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தராத எடப்பாடி பழனிசாமி, நாங்கள் ஆயிரம் ரூபாய் தந்த பின்பு 1,500 ரூபாய் தருவோம் எனப் பேசுகிறார்” என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளைக் கலைக்கப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும், நாங்கள் ஏற்படுத்திய அமைப்பை நாங்களே எப்படி கலைப்போம்? என்றும் பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.