திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகி உள்ளனர்.
கடத்தல் வழக்கில் தொடர்பு?
இந்த நிலையில் தனுஷின் தம்பி 17 வயது சிறுவனை ஏடிஜிபி ஒருவரின் காரில் கடத்திச்சென்றதாக பெண் விட்டாரின் தரப்பில் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்புள்ளதாக கூறி அவரை கைது செய்வதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசாருடன் அவரது வீட்டிற்கு சென்றனர்.
அப்போது புரட்சி பாரத கட்சியினர் வீட்டின் கேட்டை பூட்டிக்கொண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் 6 மணி நேரத்திற்கு பின் வீட்டில் மட்டும் சோதனை நடத்தினர். அவர் வீட்டில் இல்லாததால் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
விடிய விடிய வாகன சோதனை
இந்த நிலையில், முன் ஜாமின் கோரி பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி ஆந்திரா அல்லது கர்நாடகா தப்பி செல்ல வாய்ப்புள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின்பேரில் 4 டி.எஸ்.பி-க்கள் தலைமையில் 14 ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி பெங்களூர் விரைவு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் செய்யப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக அதிமுக கூட்டணி கட்சித் தலைவரான பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய முயற்சிக்கும் தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடத்தல் வழக்கில் தொடர்பு?
இந்த நிலையில் தனுஷின் தம்பி 17 வயது சிறுவனை ஏடிஜிபி ஒருவரின் காரில் கடத்திச்சென்றதாக பெண் விட்டாரின் தரப்பில் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்புள்ளதாக கூறி அவரை கைது செய்வதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசாருடன் அவரது வீட்டிற்கு சென்றனர்.
அப்போது புரட்சி பாரத கட்சியினர் வீட்டின் கேட்டை பூட்டிக்கொண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் 6 மணி நேரத்திற்கு பின் வீட்டில் மட்டும் சோதனை நடத்தினர். அவர் வீட்டில் இல்லாததால் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
விடிய விடிய வாகன சோதனை
இந்த நிலையில், முன் ஜாமின் கோரி பூவை ஜெகன் மூர்த்தி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி ஆந்திரா அல்லது கர்நாடகா தப்பி செல்ல வாய்ப்புள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின்பேரில் 4 டி.எஸ்.பி-க்கள் தலைமையில் 14 ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி பெங்களூர் விரைவு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் செய்யப்பட்டு வருகின்றனர்.
முன்னதாக அதிமுக கூட்டணி கட்சித் தலைவரான பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய முயற்சிக்கும் தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.