தலைநகர் சென்னையின் குடிநீர் ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு' தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். சென்னையைச் சுற்றியுள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு அடுத்தபடியாக, இது சென்னையின் 6-வது முக்கிய நீர்த்தேக்கமாக அமையவுள்ளது.
"நீர் மேலாண்மையே அரசின் இலக்கு"
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நிதி மேலாண்மை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நீர் மேலாண்மையும் மிக முக்கியம். திமுக ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை எனச் சிலர் பொய் சொல்கிறார்கள். 1967 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலங்களில் மட்டும் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 121 தடுப்பணைகள் மற்றும் 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சென்னைக்கு எண்ணற்ற திட்டங்கள்
தொடந்து பேசிய அவர், "ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும். 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும். 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.
சென்னையைச் சுற்றி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் ஏற்கனவே உள்ளன. நிதி மேலாண்மை போல் நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். தலைநகர் சென்னைக்காக தி.மு.க. அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது. சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
"நீர் மேலாண்மையே அரசின் இலக்கு"
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நிதி மேலாண்மை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நீர் மேலாண்மையும் மிக முக்கியம். திமுக ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை எனச் சிலர் பொய் சொல்கிறார்கள். 1967 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலங்களில் மட்டும் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. 121 தடுப்பணைகள் மற்றும் 63 அணைக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சென்னைக்கு எண்ணற்ற திட்டங்கள்
தொடந்து பேசிய அவர், "ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது. புதிய நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்க முடியும். 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும். 34 கி.மீ. நீள கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.
சென்னையைச் சுற்றி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் ஏற்கனவே உள்ளன. நிதி மேலாண்மை போல் நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம். தலைநகர் சென்னைக்காக தி.மு.க. அரசு எத்தனையோ திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறது. சென்னையின் முகமே மாறக்கூடிய வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
LIVE 24 X 7









