நேற்று அதிகாலை, எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து சென்னைக்கு வந்த பயணிகள் விமானம் ஒன்றில், பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலையத்தில் அதிகாரிகள் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
அந்த விமானத்திலிருந்து வெளியே வந்த பயணிகளில், கென்யா நாட்டைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்.
சாக்லேட் பாக்கெட்டுகளில் கொக்கைன்
அதிகாரிகள் அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அவரது உடைமைகளுக்குள் சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது, சாக்லேட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 2 கிலோ கொக்கைனின் சர்வதேச மதிப்பு ₹20 கோடி ஆகும். இதையடுத்து,அந்தக் கென்யா நாட்டு இளைஞரை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணைக்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விமானத்திலிருந்து வெளியே வந்த பயணிகளில், கென்யா நாட்டைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார்.
சாக்லேட் பாக்கெட்டுகளில் கொக்கைன்
அதிகாரிகள் அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அவரது உடைமைகளுக்குள் சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது, சாக்லேட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 2 கிலோ கொக்கைனின் சர்வதேச மதிப்பு ₹20 கோடி ஆகும். இதையடுத்து,அந்தக் கென்யா நாட்டு இளைஞரை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணைக்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.