திண்டுக்கல் அருகே நடைப்பெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் போது திடீரென மழைக்காலத்தில் வரும் பறக்கும் பூச்சிகள் களத்திற்குள் வட்டமிடத் தொடங்கியதால் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. வேப்பமர இலைகளால் புகைப்போட்டு பூச்சிகளை விரட்டியடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் கிரிக்கெட் மைதானத்தில் TNPL-2025 வது சீசனின் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கும், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்கும் இடையான லீக் போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மதுரை அணியினரின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். கேப்டன் சத்ருவேத், ரஹ்மான், முருகன் அஸ்வின் போன்றோர் சிறப்பான பங்களிப்பு வழங்கியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியின் விஜய் ஷங்கர் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 157 ரன்கள் இலக்குடன் களமிறங்கி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பேட்ஸ்மேன்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆட்டத்தின் 9.2 ஆவது ஓவரில் திடீரென மைதானத்தின் நான்கு புறமும் இருந்த மின்னொளி விளக்கைச் சுற்றிலும் மழைக்காலத்தில் உலா வரும் இரவு பூச்சிகள் அதிகளவில் தோன்றியது. சிறிது நேரத்தில் மைதானத்திற்குள்ளும் அந்த பூச்சிகள் நுழைந்து விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் முதுகிலும், கழுத்திலும் சுற்றத் துவங்கியது.
இதனையடுத்து களத்திலிருந்த அனைத்து வீரர்களும் பெவிலியன் திரும்பினர். உடனே மைதான பராமரிப்பாளர்கள் தள்ளு வண்டியில் வேப்ப மர இலைகளை வைத்து புகை மூட்டத்தை ஏற்படுத்தி மைதானத்தைச் சுற்றிலும் மழைக்கால பூச்சிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக ஆட்டம் தடைப்பட்டது.
இதை மைதானத்தில் அடுத்து கோவை மற்றும் சேலம் அணிகளுக்கான போட்டி நடைப்பெற இருந்ததால் DRS முறையில் சென்னை அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 14 ஓவருக்கு 114 ரன்கள் எடுக்க வேண்டும் என சென்னை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மைதானத்திற்குள் புகுந்த பூச்சியினை விரட்ட வேப்பமர இலையால் புகைப்போட்ட காட்சிகள் மைதானத்திலிருந்த ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் சிரிப்பலையை உண்டாக்கியது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் கிரிக்கெட் மைதானத்தில் TNPL-2025 வது சீசனின் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கும், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்கும் இடையான லீக் போட்டி நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மதுரை அணியினரின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். கேப்டன் சத்ருவேத், ரஹ்மான், முருகன் அஸ்வின் போன்றோர் சிறப்பான பங்களிப்பு வழங்கியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியின் விஜய் ஷங்கர் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 157 ரன்கள் இலக்குடன் களமிறங்கி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பேட்ஸ்மேன்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆட்டத்தின் 9.2 ஆவது ஓவரில் திடீரென மைதானத்தின் நான்கு புறமும் இருந்த மின்னொளி விளக்கைச் சுற்றிலும் மழைக்காலத்தில் உலா வரும் இரவு பூச்சிகள் அதிகளவில் தோன்றியது. சிறிது நேரத்தில் மைதானத்திற்குள்ளும் அந்த பூச்சிகள் நுழைந்து விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் முதுகிலும், கழுத்திலும் சுற்றத் துவங்கியது.
இதனையடுத்து களத்திலிருந்த அனைத்து வீரர்களும் பெவிலியன் திரும்பினர். உடனே மைதான பராமரிப்பாளர்கள் தள்ளு வண்டியில் வேப்ப மர இலைகளை வைத்து புகை மூட்டத்தை ஏற்படுத்தி மைதானத்தைச் சுற்றிலும் மழைக்கால பூச்சிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக ஆட்டம் தடைப்பட்டது.
இதை மைதானத்தில் அடுத்து கோவை மற்றும் சேலம் அணிகளுக்கான போட்டி நடைப்பெற இருந்ததால் DRS முறையில் சென்னை அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 14 ஓவருக்கு 114 ரன்கள் எடுக்க வேண்டும் என சென்னை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விளையாடிய சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மைதானத்திற்குள் புகுந்த பூச்சியினை விரட்ட வேப்பமர இலையால் புகைப்போட்ட காட்சிகள் மைதானத்திலிருந்த ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் சிரிப்பலையை உண்டாக்கியது.