விளையாட்டு

Chance-eh இல்ல.. Chance-eh இல்ல.. நம்ம சென்னை போல வேர ஒரு ஊரே இல்ல - சென்னை மக்களை பாராட்டிய ஜடேஜா!

சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் பணிவுதான். வெற்றியோ, தோல்வியோ அவர்களின் அன்பு என்றும் குறையாது. ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை சென்னை மக்கள் குறித்து சிஎஸ்கே வீரர் ஜடேஜா புகழாரம் தெரிவித்துள்ளார்.

Chance-eh இல்ல.. Chance-eh இல்ல.. நம்ம சென்னை போல வேர ஒரு ஊரே இல்ல - சென்னை மக்களை பாராட்டிய ஜடேஜா!
சென்னை அணியின் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா - அஷ்வின் ரவிச்சந்திரன்
கிரிக்கெட் வீரர் அஷ்வினின் யூடியூப் சேனலுக்கு சிஎஸ்கே அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தோனி உடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, சென்னையையும், குஜராத்தையும் ஒப்பிட்டு அவர் சென்னை மக்கள் குறித்து புகழ்ந்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை மக்கள் குறித்துப் பேசிய ஜடேஜா, "சென்னை மக்கள் நன்கு படித்தவர்கள் என இங்கு வந்தபோது உணர்ந்து கொண்டேன். இவர்களோடு ஒப்பிடுகையில் குஜராத்தில் கல்வியறிவு சற்று குறைவே. . கல்வியறிவு மற்றும் மனிதநேயத்தில் இவர்களுக்கு ஒப்பாக வேறு யாரும் இல்லை,” என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தனது சொந்த மாநிலமான குஜராத்துடன் ஒப்பிடுகையில், சென்னை மக்களின் கல்வியறிவு சிறந்ததாகவும், அவர்கள் நடத்தை பணிவானது என்றும் அவர் கூறினார். “சென்னை மக்கள் வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மாதிரியான அன்பைக் காட்டுகிறார்கள். அது தான் எனக்கு மிகவும் பிடித்தது,” என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.

சென்னை ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் CSK வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கிறது என்பதற்கும் ஜடேஜாவின் இத்தைய பேச்சு சான்றாக அமைந்துள்ளது. “மற்ற மாநிலங்களில் தோல்வியுற்றால் விமர்சனங்கள் அதிகம் வரும். ஆனால் சென்னையில் அப்படி இல்லை. இங்கு உண்மையான ரசிகர்கள் வாழ்கிறார்கள்,” என அவர் கூறினார்.

ஜடேஜாவின் இந்த நெகிழ்ச்சி மிக்க வார்த்தைகளையும், அவர் பேசிய காணொளியையும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல், சென்னை மக்களும், சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தொடர்ந்து, ஜடேஜா ஒவ்வொரு முறையும் சென்னை வரும்போதேல்லாம், சென்னையை தனது சொந்த ஊராகவும், சென்னை அணியை தனது குடும்பத்தினராகவும், சென்னை அணியின் ரசிகர்களை உறவுகளாகவும் கருதி இன்ஸ்டகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.