தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் வலுவான அடித்தளமாக தமிழ்நாடு பிரிமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரானது கடந்த ஜூன் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (ஜூன் 14, 2025) நடைப்பெற்ற லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் சுவாரஸ்யமான சம்பவம் நடைப்பெற்றது. திண்டுக்கல் அணியின் மோசமான பீல்டிங்கை நகைச்சுவையாக கிண்டலடித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி ஆரம்பம் முதலே பவுண்டரிகளை விளாச முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சில் திணறி வந்தது. தொடக்க வீரர்களான ராம் அரவிந்த் 18 ரன்களிலும், அனிருத் 31 ரன்களிலும், மதுரை அணியின் கேப்டன் சத்ருவத் 15 ரன்களிலும் அவுட்டாகினார். பொறுமையாக ரன்களை எடுத்து வந்த ரஹ்மான் 41 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். இதன் பின் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்னிங்ஸின் கடைசி பந்தில், குர்ஜப்நீத் சிங் ஒரு ஷாட்டை அடிக்க, பந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் சென்றது. அங்கிருந்த திண்டுக்கல் அணியின் கேப்டன் அஷ்வின் பந்தைப் பிடித்து, ரன் அவுட் செய்ய பந்துவீச்சாளர் முனை நோக்கி வீசினார். ஆனால், பந்துவீச்சாளர் அதை சரியாகப் பிடிக்கத் தவறினார்.
இதனால் பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் மட்டுமே எடுக்க வேண்டிய இடத்தில், இரண்டாவது ரன் எடுத்தனர். அதன்பிறகு, ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த தடுப்பாளர் பந்தை மீண்டும் வீச, அது விக்கெட் கீப்பரைத் தாண்டிச் சென்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, குர்ஜப்நீத் சிங்கும் அவரது எஸ். ராஜலிங்கமும் மூன்றாவது ரன்னுக்கு ஓடினர். இன்னிங்ஸின் முடிவில் மதுரை அணி 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.
ஒரே ஒரு ரன்.. அதுவும் சரியாக த்ரோ செய்திருந்தால் நிச்சயம் அவுட்டாகி இருப்பார். அப்படிப்பட்ட நிலையில், எதிரணியினர் மூன்று ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது திண்டுக்கல் அணியின் சொதப்பல் பீல்டிங். கிரிக்கெட் செய்து கொண்டிருந்த வர்ணனையாளர்களும் தங்களது சிரிப்பினை அடக்க முடியாமல் சிரித்தனர்.
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய திண்டுக்கல் அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. 29 பந்துகளில் அஸ்வின் 49 ரன்களை குவித்தார். மறுமுனையில், சிவம் சிங் 41 பந்துகளில் 86 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். 12.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 தொடரானது கடந்த ஜூன் 5 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை (ஜூன் 14, 2025) நடைப்பெற்ற லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் சுவாரஸ்யமான சம்பவம் நடைப்பெற்றது. திண்டுக்கல் அணியின் மோசமான பீல்டிங்கை நகைச்சுவையாக கிண்டலடித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி ஆரம்பம் முதலே பவுண்டரிகளை விளாச முடியாமல் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்து வீச்சில் திணறி வந்தது. தொடக்க வீரர்களான ராம் அரவிந்த் 18 ரன்களிலும், அனிருத் 31 ரன்களிலும், மதுரை அணியின் கேப்டன் சத்ருவத் 15 ரன்களிலும் அவுட்டாகினார். பொறுமையாக ரன்களை எடுத்து வந்த ரஹ்மான் 41 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். இதன் பின் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டுவதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்னிங்ஸின் கடைசி பந்தில், குர்ஜப்நீத் சிங் ஒரு ஷாட்டை அடிக்க, பந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் சென்றது. அங்கிருந்த திண்டுக்கல் அணியின் கேப்டன் அஷ்வின் பந்தைப் பிடித்து, ரன் அவுட் செய்ய பந்துவீச்சாளர் முனை நோக்கி வீசினார். ஆனால், பந்துவீச்சாளர் அதை சரியாகப் பிடிக்கத் தவறினார்.
THIS IS PEAK TNPL MOMENT 😂👌 pic.twitter.com/8eVuUZgS06
— Johns. (@CricCrazyJohns) June 14, 2025
இதனால் பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் மட்டுமே எடுக்க வேண்டிய இடத்தில், இரண்டாவது ரன் எடுத்தனர். அதன்பிறகு, ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்த தடுப்பாளர் பந்தை மீண்டும் வீச, அது விக்கெட் கீப்பரைத் தாண்டிச் சென்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, குர்ஜப்நீத் சிங்கும் அவரது எஸ். ராஜலிங்கமும் மூன்றாவது ரன்னுக்கு ஓடினர். இன்னிங்ஸின் முடிவில் மதுரை அணி 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.
ஒரே ஒரு ரன்.. அதுவும் சரியாக த்ரோ செய்திருந்தால் நிச்சயம் அவுட்டாகி இருப்பார். அப்படிப்பட்ட நிலையில், எதிரணியினர் மூன்று ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது திண்டுக்கல் அணியின் சொதப்பல் பீல்டிங். கிரிக்கெட் செய்து கொண்டிருந்த வர்ணனையாளர்களும் தங்களது சிரிப்பினை அடக்க முடியாமல் சிரித்தனர்.
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய திண்டுக்கல் அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. 29 பந்துகளில் அஸ்வின் 49 ரன்களை குவித்தார். மறுமுனையில், சிவம் சிங் 41 பந்துகளில் 86 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். 12.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.