சமீபத்தில் வெளியான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து கௌரவிக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இதற்காக, சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா மூன்று கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
விருது வழங்குவதற்கு முன்பு, மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், “நீட் மட்டும்தான் உலகமா? நீட்ட தாண்டி இந்த உலகம் ரொம்ப பெருசு. அதில் நீங்க சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கு. பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் கூட, சாதிசாயம் பூசுவது போல் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்” என குறிப்பிட்டார்.
மேலும், “உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதன்படி வழிநடத்துங்கள். சாதி மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் போய்விடாதீர்கள். உங்கள் எண்ணத்தை பாதிக்க அனுமதிக்காதீர்கள். விவசாயிகள் சாதி, மதம் பார்த்து பொருளை விளைவிப்பதில்லை, தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து உற்பத்தி செய்வதில்லை. வெயில், மழையில் எல்லாம் சாதி-மதமா இருக்கிறது? போதைப் பொருட்களை அறவே ஒதுக்கியதுபோல், சாதி-மதத்தையும் தூரம் ஒதுக்குவது நல்லது” என்றார்.
”அடுத்த வருஷம் வண்டி வண்டியாக பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள். அது உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம்தான். என்ன பண்ணப்போறீங்க? என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரியும். ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல. சாதாரண விஷயம்தான். நல்லவர்கள். நம்பிக்கையானவர்கள். இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஓவியாஞ்சலி மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சோபியாவுக்கு வைர காதணி வழங்கி கெளரவித்த தவெக தலைவர் விஜய்.
விருது வழங்குவதற்கு முன்பு, மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், “நீட் மட்டும்தான் உலகமா? நீட்ட தாண்டி இந்த உலகம் ரொம்ப பெருசு. அதில் நீங்க சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கு. பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் கூட, சாதிசாயம் பூசுவது போல் ஒரு கேள்வியை கேட்டுள்ளார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்” என குறிப்பிட்டார்.
மேலும், “உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதன்படி வழிநடத்துங்கள். சாதி மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் போய்விடாதீர்கள். உங்கள் எண்ணத்தை பாதிக்க அனுமதிக்காதீர்கள். விவசாயிகள் சாதி, மதம் பார்த்து பொருளை விளைவிப்பதில்லை, தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து உற்பத்தி செய்வதில்லை. வெயில், மழையில் எல்லாம் சாதி-மதமா இருக்கிறது? போதைப் பொருட்களை அறவே ஒதுக்கியதுபோல், சாதி-மதத்தையும் தூரம் ஒதுக்குவது நல்லது” என்றார்.
”அடுத்த வருஷம் வண்டி வண்டியாக பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள். அது உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம்தான். என்ன பண்ணப்போறீங்க? என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரியும். ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல. சாதாரண விஷயம்தான். நல்லவர்கள். நம்பிக்கையானவர்கள். இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஓவியாஞ்சலி மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற மாணவி சோபியாவுக்கு வைர காதணி வழங்கி கெளரவித்த தவெக தலைவர் விஜய்.