அரசியல்

திமுகவினரிடம் இருந்து பெண்களை காக்க வேண்டிய அவல நிலை.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் ? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திமுகவினரிடம் இருந்து பெண்களை காக்க வேண்டிய அவல நிலை.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
Edappadi Palaniswami condemns
விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் பெண் ஒருவரை ஆறு மாதங்களாக மிரட்டித் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

'கொடுஞ்செயலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி'

எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

"காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி" எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வர் மீது விமர்சனம்

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்?

அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த முதல்வர் இருக்கிறார்.

கடுமையான சட்ட நடவடிக்கைகள் வேண்டும்

தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்? உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.