தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வில், பேசிய காணொளி ஒன்று சர்ச்சையானது. இதனைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனம் எழுந்தது. இந்நிலையில், திமுக கட்சியில் அவர் வகித்து வந்த திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று காலை நீக்கப்பட்டதாக இன்று காலை அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி வகித்து வந்த திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், அமைச்சர்கள் பலர் தங்கள் கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், பொதுவான இடங்களிலும் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். உதாரணமாக அமைச்சர் பொன்முடி கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மகளிர் இலவச பேருந்து பயணம் குறித்து, பெண்களிடம் "ஓசி பஸ்" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றொரு விழா நிகழ்வில் ஒன்றிய குழு தலைவரை சாதி பெயர் குறிப்பிட்டு பேசியும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னைத் துன்புறுத்துவது போல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக்கூடாது. நாள்தோறும் நமது கட்சியினர் யாரும் புது பிரச்னையை உருவாக்கிடக்கூடாது என்கிற எண்ணத்தோடு தான் கண் விழிக்கிறேன். சில நேரம் தூங்க விடாமலும் செய்துவிடுகின்றனர்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ”கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி, கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி., அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், அமைச்சர்கள் பலர் தங்கள் கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், பொதுவான இடங்களிலும் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். உதாரணமாக அமைச்சர் பொன்முடி கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மகளிர் இலவச பேருந்து பயணம் குறித்து, பெண்களிடம் "ஓசி பஸ்" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றொரு விழா நிகழ்வில் ஒன்றிய குழு தலைவரை சாதி பெயர் குறிப்பிட்டு பேசியும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும், இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னைத் துன்புறுத்துவது போல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக்கூடாது. நாள்தோறும் நமது கட்சியினர் யாரும் புது பிரச்னையை உருவாக்கிடக்கூடாது என்கிற எண்ணத்தோடு தான் கண் விழிக்கிறேன். சில நேரம் தூங்க விடாமலும் செய்துவிடுகின்றனர்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ”கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி, கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி., அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க. துணைப் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.