தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். முன்னதாக அச்சுந்தன்வயல் பகுதியில் அமைந்திருக்கும் கட்சி அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி வணங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன் வைத்தனர்.
வெற்றி மாநாடாக நடைபெற உள்ளது
அப்போது, அமைச்சர் மனோ தங்கராஜ் கோவிலுக்கு செல்வதை விமர்சனம் செய்திருந்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார் மனோ தங்கராஜ் என பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆளும் திமுக பல்வேறு இடையூறு செய்து வருகின்றனர். வருகின்ற 22ம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றி மாநாடாக நடைபெற உள்ளது.
திமுகவுக்கு தோல்வி பயம்
முருக பக்தர்களுக்கு பல்வேறு இடையூறுகளை திமுக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணியாக இருப்பதால் திமுக இதைக்கண்டு அஞ்சி வருகிறது. மேலும் திமுக தோல்வி பயத்தில் உள்ளது.
மக்களின் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது. தமிழகத்தில் வன்முறையைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கட்டப் பஞ்சாயத்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.
வெற்றி மாநாடாக நடைபெற உள்ளது
அப்போது, அமைச்சர் மனோ தங்கராஜ் கோவிலுக்கு செல்வதை விமர்சனம் செய்திருந்ததாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்கிறார் மனோ தங்கராஜ் என பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆளும் திமுக பல்வேறு இடையூறு செய்து வருகின்றனர். வருகின்ற 22ம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றி மாநாடாக நடைபெற உள்ளது.
திமுகவுக்கு தோல்வி பயம்
முருக பக்தர்களுக்கு பல்வேறு இடையூறுகளை திமுக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணியாக இருப்பதால் திமுக இதைக்கண்டு அஞ்சி வருகிறது. மேலும் திமுக தோல்வி பயத்தில் உள்ளது.
மக்களின் செல்வாக்கை இழந்த கட்சியாக திமுக மாறி வருகிறது. தமிழகத்தில் வன்முறையைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கட்டப் பஞ்சாயத்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.