எம்ஜிஆர் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு, ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். "மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல்" என்று அவர் கூறியுள்ளார்.
“திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் எம்ஜிஆர் என்ற விமர்சனம் உண்டு. ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தார் எம்ஜிஆர்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, எம்ஜிஆரை திருமாவளவன் விமர்சனம் செய்துவிட்டதாக அவருக்கு எதிராக அதிமுகவினர் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். “எம்ஜிஆரை விமர்சித்த திருமாவளவன் அரசியலில் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்” என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், “மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களை கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல்” என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனுக்கு கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் எம்ஜிஆர். அவர் தோற்றுவித்த அதிமுக என்னும் மாபெரும் இயக்கமும் அனைவருக்குமான ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்றது
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்திய பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல்.
திருமாவளவன் சிந்திக்க வேண்டும்
வரும் தேர்தலில், கூடுதல் தொகுதிகள் வாங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோ திமுகவையோ அல்லது திமுக தலைவரையோ திருமாவளவன் புகழ்ந்து பேசுவதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
அதே சமயத்தில், மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது நாகரிகமற்ற செயல். "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்திய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சாதியின் பெயரால் விமர்சிப்பது நியாயமா என்பதை திருமாவளவன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விமர்சனத்தை திரும்பப் பெறுக
"வறியவர்களுக்கு வழங்கிய வள்ளல்களின் புகழைப் பற்றித்தான் உலகம் எப்போதும் சிறப்பாகப் பேசும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணாக திருமாவளவன் பேசியிருப்பது அவருக்கு நல்லதல்ல. அது அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது. எனவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்த விமர்சனத்தை திருமாவளவன் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
“திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்தவர் எம்ஜிஆர் என்ற விமர்சனம் உண்டு. ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தார் எம்ஜிஆர்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, எம்ஜிஆரை திருமாவளவன் விமர்சனம் செய்துவிட்டதாக அவருக்கு எதிராக அதிமுகவினர் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர். “எம்ஜிஆரை விமர்சித்த திருமாவளவன் அரசியலில் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்” என்று எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், “மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களை கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல்” என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனுக்கு கண்டனம்
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் எம்ஜிஆர். அவர் தோற்றுவித்த அதிமுக என்னும் மாபெரும் இயக்கமும் அனைவருக்குமான ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்றது
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்திய பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு சட்டப் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல்.
திருமாவளவன் சிந்திக்க வேண்டும்
வரும் தேர்தலில், கூடுதல் தொகுதிகள் வாங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவோ திமுகவையோ அல்லது திமுக தலைவரையோ திருமாவளவன் புகழ்ந்து பேசுவதில் யாருக்கும் எவ்வித மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது.
அதே சமயத்தில், மக்கள் செல்வாக்கு பெற்ற, சாதி மதங்களைக் கடந்த மறைந்த தலைவர்களை விமர்சிப்பது என்பது நாகரிகமற்ற செயல். "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்திய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சாதியின் பெயரால் விமர்சிப்பது நியாயமா என்பதை திருமாவளவன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
விமர்சனத்தை திரும்பப் பெறுக
"வறியவர்களுக்கு வழங்கிய வள்ளல்களின் புகழைப் பற்றித்தான் உலகம் எப்போதும் சிறப்பாகப் பேசும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணாக திருமாவளவன் பேசியிருப்பது அவருக்கு நல்லதல்ல. அது அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது. எனவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்த விமர்சனத்தை திருமாவளவன் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.