புதிய போப்பை தேர்ந்தெடுக்க 71 நாடுகளை சேர்ந்த 133 கார்டினல்களும், ரோம் நகரில் உள்ள வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தின் கான்க்ளேவ் மாநாட்டில் பங்கேற்றனர். இதில் முதல் நாள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால், தேவாலயத்தில் இருண்டு கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து 2-வது நாள் வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதைக் குறிக்கும் விதமாக புகைப் போக்கி வழியாக வெண்புகை வெளியிடப்பட்டது. மேலும், புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய மணிகள் ஒலித்தன.
I announce to you a great joy;
— Vatican News (@VaticanNews) May 8, 2025
we have a Pope:
The Most Eminent and Most Reverend Lord,
Lord Robert Francis
Cardinal of the Holy Roman Church Prevost
who has taken the name Leo XIV.
Cardinal Protodeacon Dominique Mamberti announces that the Cardinals have elected Cardinal Robert… pic.twitter.com/u3lDDlk1L4
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரோவேஸ்ட் வயது (69) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த இவர், பெருவில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் வாடிகனின் 267 போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.