அகமதாபாத்தில் விமான விபத்தில், முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது, முன்னாள் முதல்வர் உள்ளிட்ட விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக அகமதாபாத் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விமான விபத்து குறித்த இந்தசம்பவம் இந்திய மக்கள், விமான பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமானம் விபத்து குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானமான AI-171 என்ற போயிங் 787 ரக விமானத்தில், பயணம் செய்த 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேரும் உயிரிழந்தாக அகமதாபாத் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். இது தவிர மருத்துவ மாணவர் விடுதி மீது விமானம் விழுந்ததால், சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணவில்லை எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது
இந்த விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக ஒரு Boarding Pass புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவரது பெயர் மற்றும் சீட் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்த சம்பவம் பாஜகவினர் மட்டும் இல்லாமல் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரூபானி அந்த விமானத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்தது உண்மைதான் என்றும், விஜய் ரூபானியின் மனைவி தனது மகளுடன் லண்டனில் இருப்பதால், மகளை சந்தித்துவிட்டு மனைவியை குஜராத் அழைத்து வருவதற்காக விமானம் மூலம் விஜய் ரூபானி இன்று கிளம்பிய நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிகப்பட்டுள்ளது. விஜய் ரூபானி வீட்டின் முன்பு உறவினர்களும், பாஜகவினரும் குவிந்து வருகின்றனர்.
விமான விபத்து குறித்த இந்தசம்பவம் இந்திய மக்கள், விமான பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமானம் விபத்து குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானமான AI-171 என்ற போயிங் 787 ரக விமானத்தில், பயணம் செய்த 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் காரர்கள், 7 போர்த்துகீசியர்கள், ஒரு கனேடியர், இரு பைலட்கள், 10 ஊழியர்கள் என மொத்தம் 242 பேரும் உயிரிழந்தாக அகமதாபாத் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். இது தவிர மருத்துவ மாணவர் விடுதி மீது விமானம் விழுந்ததால், சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காணவில்லை எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது
இந்த விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக ஒரு Boarding Pass புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவரது பெயர் மற்றும் சீட் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்த சம்பவம் பாஜகவினர் மட்டும் இல்லாமல் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரூபானி அந்த விமானத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்தது உண்மைதான் என்றும், விஜய் ரூபானியின் மனைவி தனது மகளுடன் லண்டனில் இருப்பதால், மகளை சந்தித்துவிட்டு மனைவியை குஜராத் அழைத்து வருவதற்காக விமானம் மூலம் விஜய் ரூபானி இன்று கிளம்பிய நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிகப்பட்டுள்ளது. விஜய் ரூபானி வீட்டின் முன்பு உறவினர்களும், பாஜகவினரும் குவிந்து வருகின்றனர்.