RCB vs LSG: ஐபிஎல் 18 வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. விராட் கோலி, ஏபிடி, கிறிஸ் கெயில், டிராவிட் என பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ள நிலையிலும், கோப்பை வெல்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. ”ஈ சாலா கப் நமதே” என்ற வார்த்தைக்காக பெங்களூரு ரசிகர்கள் சந்தித்த அவமானங்களை சொல்லிமாளாது. அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட அணி என்றால் பெங்களூரு தான்.
அவர்களையும் சும்மா சொல்லக்கூடாது, லீக் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ப்ளே-ஆப் சென்றபின் சொதப்புவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி முன்னேறிய போதும், மூன்று முறையும் தோல்வியடைந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி. 2011-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி. 2016-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நம்ம ஆர்சிபி-யா இது?
ஆனால், இந்த முறை மிஸ் ஆகாது.. என்பது போல தான் பெங்களூரு அணியின் ஆட்டம் அமைந்துள்ளது. நேற்று லக்னோவில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம், ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சேஸிங்காக அமைந்துள்ளது.
முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 61 பந்துகளில் 118 ரன்கள் (11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்து மிரட்டினார்.
228 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, விராட் கோலி (30 பந்துகளில் 54 ரன்கள்) மற்றும் பிலிப் சால்ட் (19 பந்துகளில் 30 ரன்கள்) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்கள் சரியத் தொடங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் அவ்வளவு தான் முடிஞ்சிடுச்சு. இனி வேலைக்கு ஆகாது என ஆர்சிபி ரசிகர்களே அப்செட் ஆகிய நிலையில் ”தூதுவன் வருவான்..நம்மை சோழ தேசம் அழைத்து செல்வான்” என்பது போல சர்ப்ரைஸ் கொடுத்தார் ஆர்சிபி அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா.
வெறும் 33 பந்துகளில் 85 ரன்களை குவித்தார் ஜிதேஷ் ஷர்மா. இதில் 8 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் நல்ல ஸ்ட்ரைக்கில் மயங்க் அகர்வால் (41 ரன்கள்) விளையாடினார். இந்த ஜோடி 107 ரன்கள் குவித்து 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இது ஆர்சிபி அணியின் அதிகப்பட்ச ரன் சேஸிங் ஆகும். மேலும், இந்த சீசனில் ஆர்சிபி அணி தான் விளையாடிய அனைத்து 7 வெளியூர் போட்டிகளிலும் (away games) வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
குவாலிஃபையர் 1 போட்டி:
இந்த வெற்றியின் மூலம், ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் (19 புள்ளிகள்) சமநிலையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. நிகர ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்திலும், ஆர்சிபி இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆர்சிபி அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் குவாலிஃபையர் 1 போட்டியில் மோத உள்ளது. இந்த போட்டி வரும் மே 29 ஆம் தேதி சண்டிகரில் உள்ள மஹாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Chandigarh) நடைபெற உள்ளது.
எந்த ஆண்டிலும் இல்லாத அளவில், ஒவ்வொரு போட்டியில் ஒரு வீரர் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளனர். மொத்த டீமும் வலுவான நிலையில் இருப்பதாலும், விராட் கோலி செம பார்மில் இருப்பதாலும் 17 வருடமாக நழுவி வரும் ஐபிஎல் கோப்பை, இந்த ஆண்டு ஆர்சிபி வசம் ஆகும் என பல ரசிகர்கள் நம்புகின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், இப்பவே ஆர்சிபி பெயரே கப்புல எழுதுங்க என அலப்பறையை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
வழக்கம் போல் ப்ளே-ஆப் சுற்றில் ஜோக் செய்யாமல், கோப்பை வென்றால் ஆர்சிபி ரசிகர்கள் இனி கேலி கிண்டல்களுக்கு உள்ளாகாமல் கொஞ்சம் காலரை தூக்கி கொண்டு நடப்பார்கள்..பார்க்கலாம் பொறுத்திருந்து!
அவர்களையும் சும்மா சொல்லக்கூடாது, லீக் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி ப்ளே-ஆப் சென்றபின் சொதப்புவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி முன்னேறிய போதும், மூன்று முறையும் தோல்வியடைந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி. 2011-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி. 2016-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நம்ம ஆர்சிபி-யா இது?
ஆனால், இந்த முறை மிஸ் ஆகாது.. என்பது போல தான் பெங்களூரு அணியின் ஆட்டம் அமைந்துள்ளது. நேற்று லக்னோவில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம், ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சேஸிங்காக அமைந்துள்ளது.
முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 61 பந்துகளில் 118 ரன்கள் (11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்து மிரட்டினார்.
228 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு, விராட் கோலி (30 பந்துகளில் 54 ரன்கள்) மற்றும் பிலிப் சால்ட் (19 பந்துகளில் 30 ரன்கள்) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், அடுத்தடுத்து விக்கெட்கள் சரியத் தொடங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் அவ்வளவு தான் முடிஞ்சிடுச்சு. இனி வேலைக்கு ஆகாது என ஆர்சிபி ரசிகர்களே அப்செட் ஆகிய நிலையில் ”தூதுவன் வருவான்..நம்மை சோழ தேசம் அழைத்து செல்வான்” என்பது போல சர்ப்ரைஸ் கொடுத்தார் ஆர்சிபி அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஜிதேஷ் ஷர்மா.
வெறும் 33 பந்துகளில் 85 ரன்களை குவித்தார் ஜிதேஷ் ஷர்மா. இதில் 8 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். மறுமுனையில் நல்ல ஸ்ட்ரைக்கில் மயங்க் அகர்வால் (41 ரன்கள்) விளையாடினார். இந்த ஜோடி 107 ரன்கள் குவித்து 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. இது ஆர்சிபி அணியின் அதிகப்பட்ச ரன் சேஸிங் ஆகும். மேலும், இந்த சீசனில் ஆர்சிபி அணி தான் விளையாடிய அனைத்து 7 வெளியூர் போட்டிகளிலும் (away games) வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
குவாலிஃபையர் 1 போட்டி:
இந்த வெற்றியின் மூலம், ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் (19 புள்ளிகள்) சமநிலையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. நிகர ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்திலும், ஆர்சிபி இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆர்சிபி அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் குவாலிஃபையர் 1 போட்டியில் மோத உள்ளது. இந்த போட்டி வரும் மே 29 ஆம் தேதி சண்டிகரில் உள்ள மஹாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Chandigarh) நடைபெற உள்ளது.
எந்த ஆண்டிலும் இல்லாத அளவில், ஒவ்வொரு போட்டியில் ஒரு வீரர் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளனர். மொத்த டீமும் வலுவான நிலையில் இருப்பதாலும், விராட் கோலி செம பார்மில் இருப்பதாலும் 17 வருடமாக நழுவி வரும் ஐபிஎல் கோப்பை, இந்த ஆண்டு ஆர்சிபி வசம் ஆகும் என பல ரசிகர்கள் நம்புகின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், இப்பவே ஆர்சிபி பெயரே கப்புல எழுதுங்க என அலப்பறையை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
வழக்கம் போல் ப்ளே-ஆப் சுற்றில் ஜோக் செய்யாமல், கோப்பை வென்றால் ஆர்சிபி ரசிகர்கள் இனி கேலி கிண்டல்களுக்கு உள்ளாகாமல் கொஞ்சம் காலரை தூக்கி கொண்டு நடப்பார்கள்..பார்க்கலாம் பொறுத்திருந்து!