ஐபிஎல் 2025 18-வது சீசன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கிய நிலையில், லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகளில் வென்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று (ஜூன் -6) இறுதிப்போட்டி இரவு 7.30 மணிக்கு குஜராத்தில் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் கண்கவர் வானவேடிக்கை மற்றும் நடன நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.
18-வது சீசனின் இறுதிப்போட்டி ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகர்பட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். அர்ஷ்தீப்சிங் மற்றும் ஜேமிசன் 2 பேரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஓமர்சாய், சைவக் விஜய்குமார், சாஹல் எல்லாம் தலா 1 விக்கெட்களை எடுத்தனர்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடியது. தொடர்ந்து, அந்த அணியில் அதிகபட்சமாக பிரயன்சு ஆர்யா 24 , பிரப்சிம்ரன்சிங் 26 ரன்களும், இங்கிலிசு 39 ரன்களும், ஷஷாங்சிங் அரைசதம் கடந்து 30 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆர்சிபி அணி சார்பில், குருணால் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
18-வது சீசனின் இறுதிப்போட்டி ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார்.
முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகர்பட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். அர்ஷ்தீப்சிங் மற்றும் ஜேமிசன் 2 பேரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஓமர்சாய், சைவக் விஜய்குமார், சாஹல் எல்லாம் தலா 1 விக்கெட்களை எடுத்தனர்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடியது. தொடர்ந்து, அந்த அணியில் அதிகபட்சமாக பிரயன்சு ஆர்யா 24 , பிரப்சிம்ரன்சிங் 26 ரன்களும், இங்கிலிசு 39 ரன்களும், ஷஷாங்சிங் அரைசதம் கடந்து 30 பந்துகளில் 61 ரன்களை குவித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆர்சிபி அணி சார்பில், குருணால் பாண்டியா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.