மும்பை, சென்னை அணி தலா 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கோப்பையினை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்படும் அணிகளுள் ஒன்றாக RCB இருந்துள்ளது. அதற்கு காரணம் வெள்ளை நிற பந்து கிரிக்கெட் போட்டிகளின் ஜாம்பவான் விராட் கோலி பெங்களூரு அணியில் அங்கம் வகிப்பது தான். கெயில், ஏபிடி, டிராவிட், என பல்வேறு நட்சத்திர வீரர்கள் பெங்களூரு அணிக்காக விளையாடிய போதும் கோப்பை என்பது இன்று வரை கனவாக மட்டுமே இருந்துள்ளது.
ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நாம் பார்க்காத ஆர்சிபி அணியினை பார்த்தோம். தொட்டதெல்லாம் மின்னும் என்பது போல், அத்தனை கேலி கிண்டல்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ளது பெங்களூரு. ஏன் இந்த ஐபிஎல் தொடர் ஆர்சிபி ரசிகர்களுக்கு மறக்க முடியாதது என்பதற்கான சில காரணங்கள் இதோ..
9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டி: கோப்பை வெல்வது தான் குறிக்கோள் என்ற நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு, RCB அணி நேற்றைய தினம் பஞ்சாப் அணியினை வீழ்த்தி IPL இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதியாக 2016-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சாதனை சேசிங்: ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் தனது அதிகப்பட்ச சேசிங்கை இந்த ஆண்டு செய்தது ஆர்சிபி. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 228 ரன்கள் என்ற இமாலாய இலக்கினை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் 2 இடம்: ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு, பிளேஆஃப்களில் கூடுதல் வாய்ப்பு ஒன்று கிடைக்கும். Qualifier 1-ல் தோற்றால் கூட Qualifier 2 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், புள்ளிப்பட்டியலில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தியது ஆர்சிபி.

17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் CSK-வை வீழ்த்தியது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கத்தில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு CSK-வை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையைப் படைத்தது ஆர்சிபி.
10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேவில் MI-யை வீழ்த்தியது: மும்பை இந்தியன்ஸ் அணியின் கோட்டையான வான்கடே மைதானத்தில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது ஆர்சிபி.
7 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் DC-யை வென்றது: டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றது ஆர்சிபி.
6 ஆண்டுகளுக்குப் பிறகு ஈடன் கார்டனில் KKR-ஐ வீழ்த்தியது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அவர்களின் கோட்டையான ஈடன் கார்டன் மைதானத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தோற்கடித்தது ஆர்சிபி
முதல் முறையாக CSK-வுடன் 2 லீக் போட்டிகளிலும் வெற்றி: ஐபிஎல் தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரலாற்றில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரு லீக் போட்டிகளிலும் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது.
Away match wins: இந்த ஐபிஎல் சீசனில், லீக் சுற்றில் பெங்களூரு அணி தான் விளையாடிய அனைத்து வெளி மைதானப் போட்டிகளிலும் (Away matches) வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் இவ்வாறு, அனைத்து வெளி மைதானப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது.
கடப்பாரை டீமாக மாறிய ஆர்சிபி: ஒரு ஐபிஎல் சீசனில், ஒரே அணியினை சேர்ந்த 10 வெவ்வேறு வீரர்கள் 50+ ரன்கள் அடித்தது இதுவே முதல் முறையாகும். இது RCB-யின் பேட்டிங் எவ்வளவு பலமாக உள்ளது என்பதற்கு சின்ன சாம்பிள்.
9 வெவ்வேறு வீரர்கள் ஆட்ட நாயகன் விருது: ஒரே சீசனில் 9 வெவ்வேறு RCB வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர், ஒட்டுமொத்த டீமும் வெறிக்கொண்ட பார்மில் இருக்கிறார்கள்.
பிளேஆஃப்களில் எதிரணியை 15 ஓவர்களுக்குள் ஆல் அவுட்: ஐபிஎல் வரலாற்றில் பிளேஆஃப் போட்டிகளில் எதிரணியை 15 ஓவர்களுக்குள் ஆல் அவுட் செய்த முதல் அணி RCB ஆகும். (நேற்று நடைப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான Qualifier 1 போட்டியில், பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது)
பிளேஆஃப்களில் அதிவேக சேசிங்: ஐபிஎல் வரலாற்றில் பிளேஆஃப் போட்டிகளில் மிக வேகமாக இலக்கை துரத்திய அணி என்ற சாதனையையும் RCB படைத்துள்ளது. (பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான Qualifier 1 போட்டியில் 10 ஓவர்களில் 106 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது).
மேற்குறிப்பிட்ட அனைத்து சாதனைகளும், 2025 ஐபிஎல் தொடரில் RCB அணி எந்த அளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதற்கான சான்றுகளாகும். கோப்பை மட்டும் தான் பாக்கி. அதையும் வென்றுவிட்டால், ஆர்சிபி ரசிகர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஒரு கோல்டன் ஆண்டாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நாம் பார்க்காத ஆர்சிபி அணியினை பார்த்தோம். தொட்டதெல்லாம் மின்னும் என்பது போல், அத்தனை கேலி கிண்டல்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு சாதனைகளை தன் வசப்படுத்தியுள்ளது பெங்களூரு. ஏன் இந்த ஐபிஎல் தொடர் ஆர்சிபி ரசிகர்களுக்கு மறக்க முடியாதது என்பதற்கான சில காரணங்கள் இதோ..
9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டி: கோப்பை வெல்வது தான் குறிக்கோள் என்ற நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு, RCB அணி நேற்றைய தினம் பஞ்சாப் அணியினை வீழ்த்தி IPL இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதியாக 2016-ல் நடைப்பெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
சாதனை சேசிங்: ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் தனது அதிகப்பட்ச சேசிங்கை இந்த ஆண்டு செய்தது ஆர்சிபி. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 228 ரன்கள் என்ற இமாலாய இலக்கினை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் 2 இடம்: ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிக்கு, பிளேஆஃப்களில் கூடுதல் வாய்ப்பு ஒன்று கிடைக்கும். Qualifier 1-ல் தோற்றால் கூட Qualifier 2 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், புள்ளிப்பட்டியலில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தியது ஆர்சிபி.

17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் CSK-வை வீழ்த்தியது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கத்தில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு CSK-வை வீழ்த்தி வரலாற்றுச் சாதனையைப் படைத்தது ஆர்சிபி.
10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்கடேவில் MI-யை வீழ்த்தியது: மும்பை இந்தியன்ஸ் அணியின் கோட்டையான வான்கடே மைதானத்தில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது ஆர்சிபி.
7 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் DC-யை வென்றது: டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வென்றது ஆர்சிபி.
6 ஆண்டுகளுக்குப் பிறகு ஈடன் கார்டனில் KKR-ஐ வீழ்த்தியது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அவர்களின் கோட்டையான ஈடன் கார்டன் மைதானத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தோற்கடித்தது ஆர்சிபி
முதல் முறையாக CSK-வுடன் 2 லீக் போட்டிகளிலும் வெற்றி: ஐபிஎல் தொடங்கி 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரலாற்றில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இரு லீக் போட்டிகளிலும் ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது.
Away match wins: இந்த ஐபிஎல் சீசனில், லீக் சுற்றில் பெங்களூரு அணி தான் விளையாடிய அனைத்து வெளி மைதானப் போட்டிகளிலும் (Away matches) வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் இவ்வாறு, அனைத்து வெளி மைதானப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது.
கடப்பாரை டீமாக மாறிய ஆர்சிபி: ஒரு ஐபிஎல் சீசனில், ஒரே அணியினை சேர்ந்த 10 வெவ்வேறு வீரர்கள் 50+ ரன்கள் அடித்தது இதுவே முதல் முறையாகும். இது RCB-யின் பேட்டிங் எவ்வளவு பலமாக உள்ளது என்பதற்கு சின்ன சாம்பிள்.
9 வெவ்வேறு வீரர்கள் ஆட்ட நாயகன் விருது: ஒரே சீசனில் 9 வெவ்வேறு RCB வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர், ஒட்டுமொத்த டீமும் வெறிக்கொண்ட பார்மில் இருக்கிறார்கள்.
பிளேஆஃப்களில் எதிரணியை 15 ஓவர்களுக்குள் ஆல் அவுட்: ஐபிஎல் வரலாற்றில் பிளேஆஃப் போட்டிகளில் எதிரணியை 15 ஓவர்களுக்குள் ஆல் அவுட் செய்த முதல் அணி RCB ஆகும். (நேற்று நடைப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான Qualifier 1 போட்டியில், பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது)
பிளேஆஃப்களில் அதிவேக சேசிங்: ஐபிஎல் வரலாற்றில் பிளேஆஃப் போட்டிகளில் மிக வேகமாக இலக்கை துரத்திய அணி என்ற சாதனையையும் RCB படைத்துள்ளது. (பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான Qualifier 1 போட்டியில் 10 ஓவர்களில் 106 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது).
மேற்குறிப்பிட்ட அனைத்து சாதனைகளும், 2025 ஐபிஎல் தொடரில் RCB அணி எந்த அளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதற்கான சான்றுகளாகும். கோப்பை மட்டும் தான் பாக்கி. அதையும் வென்றுவிட்டால், ஆர்சிபி ரசிகர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஒரு கோல்டன் ஆண்டாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.