K U M U D A M   N E W S
Advertisement

மது ஒழிப்பை யார் நினைத்தாலும் செய்ய முடியாது.. ஆனால்.. திமுக அமைச்சர் புது விளக்கம்

மது ஒழிப்பை எந்த கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது என்றும் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

டி.வி.யில் விளம்பரம்.. காதில் மைக்.. ஆன்மிக குருவுக்கு லட்சணமா? - விளாசும் செல்வராகவன்

தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் வைத்துக்கொண்டு, உங்களுக்கு தியானம் சொல்லித்தருகிறேன் என்று எல்லாம் சொல்லமாட்டார்கள் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

“சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா” - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“இந்திய சீன உறவு சீனாவின் பார்வையில் இருந்து” என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

மகாவிஷ்ணு விவகாரம்... விரைவில் அறிக்கை தாக்கல்

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

விவாகரத்துகோரி ஜெயம் ரவி மனு தாக்கல்

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது

மத்திய அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்காததால் 15ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

’விஜய் மாமாவ ரொம்ப பிடிக்கும்’... விஜய் கொடுத்த கட்டிப்புடி வைத்தியம்... துள்ளி குதித்த சிறுவன்!

"கேரளாவுல விஜய் சார் என் பையனை கட்டிபுடிச்சதும் அவன் ரொம்போ சந்தோஷமாயிட்டான்.. அதுக்கப்பறம் அவர டி.வியில பாத்தாலே துள்ளுவான்" என பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க கேரளாவிலிருந்து சென்னை வந்த குடும்பம் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

விஜய் கட்சியால் வாக்குகள் சிதறுமா..? - பிரேமலதா விஜயகாந்த் நச் பதில்

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியால் வாக்குகள் சிதறுமா என்ற கேள்விக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அமெரிக்க முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

மகா விஷ்ணுவுக்கு அனுமதி அளித்தது யார்? பரிந்துரைத்தது யார்? - வெளியான புதிய தகவல்கள்

அரசுப் பள்ளியில் மகா விஷ்ணுவின் சொற்பொழிவுக்கு பரிந்துரைத்தது யார்? அனுமதி அளித்தது யார் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகாவிஷ்ணு விவகாரம் - வெளியான புதிய தகவல்கள்!

Mahavishnu case update: அசோக் நகர் பள்ளியின் மேலாண்மை குழுவை சேர்ந்த காமாட்சி என்பவர் மூலமாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.