K U M U D A M   N E W S

மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு.. வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு: கோவை வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி! நேரில் ஆய்வு செய்த வானதி சீனிவாசன்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.

வர்த்தகப் போரின் புதிய பரிணாமம்: நாசாவில் சீனர்களுக்குத் தடை!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா-வில் சீனர்கள் பணியாற்றத் தடை; இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் விண்வெளியிலும் எதிரொலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் ட்ரம்புடன் பேச ஆவலுடன் இருக்கிறேன்- பிரதமர் மோடி பதில்!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

டிரம்ப் இந்தியப் பயணம் ரத்து: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மறுப்பு – வர்த்தகத் தகராறு காரணமா?

இந்தியா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்தியப் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா சென்றடைந்த பிரதமர்.. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உரை!

இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா - சீனா உறவில் புதிய அத்தியாயம்.. ஏற்றுமதி பொருட்களுக்குக் கட்டுப்பாடுகள் தளர்வு!

இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகை.. எல்லை வர்த்தகம்குறித்து பேச்சுவார்த்தை!

அரசு முறைப் பயணமாக 2 நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாளை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.