K U M U D A M   N E W S

Stalin

Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் கொலை... திமுக மீது குற்றச்சாட்டு... பா ரஞ்சித்துக்கு போஸ் வெங்கட் அட்வைஸ்

பகுஜன் சமாஜ்வாதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வாரம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்திருந்த இயக்குநர் பா ரஞ்சித், திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து பா ரஞ்சித்துக்கு நடிகர் போஸ் வெங்கட் அட்வைஸ் செய்துள்ளார்.

'இனி ஸ்டாலினிடம் சொல்லி எந்த பயனும் இல்லை'.. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு ட்வீட்.. என்ன விஷயம்?

''மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்''

வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?... 'திமுக' அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

''திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன்''

ஸ்டாலினுக்கு மட்டும்தான் தெரியும்.. எல்லாம் பாகப் பிரிவினை சண்டை - இ.பி.எஸ். தாக்கு

கோவை, நெல்லை மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. எல்லாம் பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் ஆம்ஸ்ட்ராங் - எல்.முருகன் புகழாரம்

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சமூக சேவையில் ஈடுபட்டு பல இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர் என்றும் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை... முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.. அதிகாரிகளுக்கு உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை… முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக சாடிய எடப்பாடி, அண்ணாமலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநில கல்விக் கொள்கை ..முதல்வரிடம் அறிக்கை சமர்பித்த குழு.. என்னென்ன சிறப்பம்சம்

மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரமின்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை.. ரூ.10 லட்சம் அபராதம்.. முதல்வர் ஸ்டாலின்

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு..திமுகவின் அரசியல் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் திமுக.. 2026 ஜனவரிக்குள் 75000 பணியிடங்கள்.. சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இப்போதிருந்தே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபையில் 110 விதி எண் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,வரும் 2026 ஜனவரிக்கு 75000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தார்.

சட்டசபையில் கலவரம் நடத்த அதிமுக திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பகீர் புகார்

சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.