K U M U D A M   N E W S

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

"தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

"இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அதிமுக!

"காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மக்களை திட்டமிட்டு குழப்புகிறது திமுக- இபிஎஸ் குற்றச்சாட்டு!

எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக மக்களை திட்டமிட்டு குழப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

"கொல்லைப்புறம் வழியாக முதல்வரானவர் இபிஎஸ்" -செங்கோட்டையன் கடும் விமர்சனம்!

"கொள்ளைப்புறம் வழியாக முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி" என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

இ.பி.எஸ் தலைமையில் அதிமுக மா.செ கூட்டம் #admk #edappadipalanisamy #elections2026 #shorts

இ.பி.எஸ் தலைமையில் அதிமுக மா.செ கூட்டம் #admk #edappadipalanisamy #elections2026 #shorts

அதிமுக Edappadi Palanisamy தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது | ADMK Meeting

அதிமுக Edappadi Palanisamy தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது | ADMK Meeting

கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்? முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- இபிஎஸ் காட்டம்!

"நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் காவல்துறை உள்ளதா? இபிஎஸ் கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டன தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

"செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க தயக்கம் இல்லை-" எடப்பாடி பழனிசாமி பதில்!

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"துரோகத்தை வீழ்த்த இணைந்துள்ளோம்"- ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் பேட்டி!

துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் இணைந்துள்ளோம் என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

அதிமுக அரசியலில் பரபரப்பு: ஓபிஎஸ்-ஸுடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம்!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.

லஞ்சம் பெற்று பணி நியமனம்: "எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்"- இபிஎஸ் குற்றச்சாட்டு!

"இளைஞர்களின் கனவை கமிஷன் கொள்ளைக்காகச் சிதைக்கும் தி.மு.க. அரசுக்கு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"வாக்குத் திருட்டு போன்ற சதி முயற்சிகளை முறியடிப்போம்"- முதல்வர் ஸ்டாலின் உரை!

"ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான், அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை அமித்ஷாவிடம் சரண்டர் செய்துவிட்டார் இபிஎஸ்- மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க. விடம் அடகு வைத்துள்ளது" என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்.. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!

"எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாத சூழலில், மீண்டும் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

"டெல்டா விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி"- எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

கரூர் சம்பவம்: காவலர்கள் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளது- எடப்பாடி பழனிசாமி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அளித்த விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மனிதராக இருக்கக்கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்- அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு!

"ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்" என்று அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து மருந்து நிறுவனம் செயல்பட்டது மாநில சுகாதாரத் துறைக்குத் தெரியாதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக கூட்டணி கனவில் எடப்பாடி பழனிசாமி.. பகல் கனவு பலிக்காது என செல்வப்பெருந்தகை அதிரடி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். சிலை சேதம்: நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள்.. இபிஎஸ் கண்டனம்!

மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"கரூர் துயரச் சம்பவம் விபத்து அல்ல.. முழுமையாக விசாரிக்க வேண்டும்"- இபிஎஸ் வலியுறுத்தல்!

கரூர் துயர சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று ஆங்கில நாளேட்டை சுட்டிக்கட்டி எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: இபிஎஸ் சுற்றுப்பயணத்துக்கு நாமக்கல் போலீஸ் அனுமதி மறுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.