சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி மாதம்.. வேப்ப மரம் பூமியில் உருவான புராண கதை தெரியுமா?
மதுரை: தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி மாதம். சூரியன் நான்காவது ராசியான கடக ராசியில் பயணம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் பண்டிகைகள் களைகட்டும். ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மன் கோவில்களில் வேப்ப இலைகள் தோராணங்கள் நிறைந்திருக்கும்.ஆடி என்பது எப்படி வந்தது என்று புராண கதை ஒன்று சொல்கிறார்கள்.