K U M U D A M   N E W S

mi

Chennai Rain: சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை... விமான சேவைகள் பாதிப்பு!

Heavy Rain Lashes Chennai Today : சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் எடுத்த திடீர் முடிவு..

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினர் வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா நடைபெறும் இடத்துக்கு பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளனர். அங்கு முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – பிரதமர் மோடி சந்திப்புவெளியாகும் முக்கிய அறிவிப்பு?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்கவுள்ள நிலையில், முக்கிய அறிவுப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளுக்கான தொகுப்பை இங்கே காணலாம்.

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியத்த இலங்கை கடற்படையினர்.

Savukku Shankar : சிறையில் இருந்து வெளிவந்தவுடன் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த சவுக்கு சங்கர்!

Savukku Shankar Criticized CM Stalin : ''இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது. ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன்'' என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

Savukku Shankar : 5 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்த சவுக்கு சங்கர்!

Savukku Shankar Released From Jail : உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியில் வந்தார்

SP Balasubrahmanyam Salai : சென்னையில் எஸ்.பி.பி பெயரில் சாலை.. நினைவு நாளில் கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin Announced SP Balasubrahmanyam Salai : சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’என பெயர் மாற்றம் செய்யக் கோரி, அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

Savukku Shankar Case : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

Savukku Shankar Case Update : யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது. அந்த விளக்கத்தை ஏற்று  குண்டாசை ரத்து செய்த்தோடு, வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

சித்தராமையா மீது வழக்கு பதிய உத்தரவு.. ஊசலில் முதலமைச்சர் பதவி..

முடா வழக்கு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

School Holiday : பசங்களுக்கு இனி ஜாலி தான்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. இத்தனை நாட்களா?

Tamil Nadu School Holiday Announcement : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.

ஜகா கேட்ட இபிஎஸ் ....தடா போட்ட தயாநிதி...Tired ஆன நீதிமன்றம்

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் பதில் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 16 தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். 

ஜம்மு காஷ்மீரில் 2ம் கட்டத் தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

நிபா வைரஸ் பரவல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Exam-ல Pass ஆகணுமா? சூப்பர் Idea கொடுத்த அன்பில் மகேஷ்

படிக்காத நண்பர்களையும் திருத்தி, அவர்களையும் தேர்வில் வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் அறிவுரை வழங்கியுள்ளார்.

26 தொகுதிகளில் தொடங்கியது 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil |

இன்றைய முக்கிய செய்திகளுக்கான தொகுப்பை இங்கே காணலாம்.

26 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. தீவிரவாத அச்சுறுத்தலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

‘திமுக ஜெயிக்க பிரதமர் மோடி தான் காரணம்’.. ட்விஸ்ட் வைத்து பேசிய உதயநிதி!

''திமுகவின் வெற்றிக்கு இரண்டாவது காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தான்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

எந்த வைரஸும் தமிழ்நாட்டில் இல்லை - மா.சுப்பிரமணியன் தகவல்!

தமிழ்நாட்டில் எந்த விதமான வைரஸ் காய்ச்சல்களும் இல்லை, நிபா வைரஸ் பரவலும் கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவது அமைச்சர்களின் முடிவு" - திருநாவுக்கரசர் MP !

Thirunavukkarasu Press Meet: உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்குவது அமைச்சர்களின் முடிவு என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு.. 'இது தவறு'.. போலீசை விளாசிய நீதிபதி!

இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ''மோகன் ஜி கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால் போலீசார் கைது செய்த விதம் சட்டவிரோதமானது’’ என்று தெரிவித்தார்.

ரேஸ் கிளப் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு!

Race Club Case Update: தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த உரிமையியல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு.

என்கவுன்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் இனிமேல் என்கவுண்டர் கொலைகள் செய்யக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

National Green Tribunal : அரசு கட்டிடங்களை ரேஸ் கிளப்புக்கு மாற்ற யோசனை

National Green Tribunal : பள்ளிக்கரணை சதுப்புநிலம், வேளச்சேரி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பாக உள்ள அரசு கட்டிடங்களை அகற்றி அதை கிண்டி ரேஸ் கிளப்புக்கு இடமாற்றலாம் அல்லது ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யோசனை தெரிவித்துள்ளது.