K U M U D A M   N E W S

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட  காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் உத்தரவு

காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட  10 மாவட்டங்களில் வரும் 19-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 மாதங்களாக நடைபெற்ற போர் முடிவுக்கு வருகிறது

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப் 

நடிகர் சயிஃப் அலிகான் மீது வீடுபுகுந்து தாக்குதல்

கத்திக்குத்து - மருத்துவமனையில் அறுவை சிகிச்சை.

அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா? சீமான் கண்டனம்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு  ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

காணும் பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம்.

திமுகவை அழிக்கும் வல்லமை யாருக்கும் இல்லை.. இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம்- சேகர் பாபு

திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தாமதம்... உதயநிதி வருகைக்காக காத்திருக்கும் மக்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி வருகைக்காக காத்திருப்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்.

அலங்காநல்லூரில் களைகட்டும் கொண்டாட்டம்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறது - களைகட்டும் கொண்டாட்டம்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.