K U M U D A M   N E W S

Dispute

கனகசபை தரிசனம்: தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடும்பப் பிரச்னை: மூன்று குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை.. தெலங்கானாவில் பயங்கரம்!

ஆந்திராவை சேர்ந்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க அன்புமணிக்கு கெடு.. ராமதாஸ் மீண்டும் எச்சரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வரும் அதிகார மோதல், கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அன்புமணி மீது சுமத்தப்பட்டுள்ள 16 குற்றச்சாட்டுகளுக்குச் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கெடு விதித்துள்ளார்.

டிரம்ப் இந்தியப் பயணம் ரத்து: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மறுப்பு – வர்த்தகத் தகராறு காரணமா?

இந்தியா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்தியப் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்க ப்ரஸ்மீட் அப்புறம் தான் கேள்விகள் இன்னும் அதிகமாகுது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை: நீதிமன்றக் காவலில் தந்தை மற்றும் மகன்!

திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாண புகைப்படங்களை வெளியிடவா? காதல் மனைவியை மிரட்டிய கொடூர கணவன்

மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட போவதாக மிரட்டிய கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டோல்கேட்டில் தகராறு: விசிக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில் அருகே திருப்பதி சாரம் டோல் கேட் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு பேரி கார்டை சேதப்படுத்திய விசிக நிர்வாகிகள் மீதுபோலீசார் வழக்குப்பதிவு

பிரியாணி சாப்பிடுவதில் சகோதரிகளிடையே தகராறு.. தங்கையின் விபரீத முடிவு!

பிரியாணி சாப்பிடுவதில் சகோதரிகள் இடையே ஏற்பட்ட தகராறில், தங்கை மொட்டை மாடியில் இருந்து குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.