K U M U D A M   N E W S

மகாவிஷ்ணு விவகாரம் - விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாவிஷ்ணுவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

மகா விஷ்ணு விவகாரம்: கல்வித்துறை செயலாளரிடம் இன்று அறிக்கை தாக்கல்.. அடுத்தது என்ன?

மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வித் துறை சரியான திசையில் செல்லவில்லை – தமிழிசை செளந்தரராஜன்

பள்ளிக்கல்வித்துறை சரியான திசையில் செல்லவில்லை என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

"பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது" - பள்ளிக்கல்வி துறை

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளுலும் ஆன்மீகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

BREAKING | ஜாபர் சாதிக்கின் சொத்துகள் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு : சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு

தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Senthil Balaji : ‘அடுத்தடுத்து செக்’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

Senthil Balaji Case Update : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Red Alert : கனமழைக்கு 28 பேர் பலி.. உணவின்றி 40,000 பேர் தவிப்பு.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்..

Red Alert Issued in Gujarat : குஜராத் மாநிலத்தின் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழையால், இதுவரை 28 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா?பிரின்ஸ் கஜேந்திரபாபு

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி