K U M U D A M   N E W S

DC

கஜகஸ்தானில் சாம்பியன் பட்டம்.. உலக செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம்: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலிருந்து விலகல்? - டி20 உலகக் கோப்பை கனவுக்கு சிக்கல்!

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்ட்யா, குவாட்ரைசெப்ஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிகிறது. அவர் முழுமையாகக் குணமடைந்தால் மட்டுமே 2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

2 மணி நேர பயணம் இனி 2 நிமிடம்.. சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு!

உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது.

மகளிா் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை!

மகளிருக்கான 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

காவலாளி வங்கி கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை – அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை

ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

சூர்யா வீட்டு வேலைக்கார கும்பல் ரூ. 42 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த 4 பேர் கைது!

டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்!

ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.