K U M U D A M   N E W S

இனி நோ பேக் பெஞ்சர்ஸ்.. U-வடிவ இருக்கைக்கு மாறும் கேரள பள்ளிகள்!

மலையாள படம் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில், மாணாக்கர்கள் அமரும் இருக்கைகளின் வரிசை அமைப்பினை மாற்றி கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது கேரளாவிலுள்ள சில பள்ளிகள்.

கல்விக்கு உபரி நிதி தான் பயன்படுத்தப்படுகிறது.. அமைச்சர் சேகர்பாபு

கல்விக்காக அறநிலையத்துறை சொத்துக்களை மட்டும் பயன்படுத்துவது ஏன்? என தமிழிசை கேள்வி எழுப்பிய நிலையில், கோயில்களின் உபரி நிதி தான் கல்விக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

வேங்கை வயல் போல் மற்றொரு சம்பவம்.. மலம் கழித்த மர்ம நபர்கள்?

திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர் பேட்டி

மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

4 கேட்சுகளை விட்டுட்டு இப்படி ஆடுறாரு? ஜெய்ஸ்வாலை தாக்கும் நெட்டிசன்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஹெடிங்லி டெஸ்ட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பீல்டிங் ரசிகர்களால் பெரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உங்கள் பாஸ்வேர்டுகளை உடனே மாற்றுங்க.. 16 பில்லியனுக்கும் அதிகமான டேட்டா கசிவு!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடைய பயனர்களின் (users) 16 பில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசிந்துள்ளன, என போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.