K U M U D A M   N E W S

AI

Heavy Rain: கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்கடலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' ட்ரெய்லர் வெளியானது!

'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூரில் பயங்கரம்: காதலுக்கு எதிர்ப்பு; இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 ஆண்டுகளாக தலைமறைவான சதுர்வேதி சாமியார்: போலீஸ் தேடுதல் வேட்டை தீவிரம்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆஜராகாததால் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் 3 அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய்க்கு ராட்சத கிரேன் மூலம் மாலை அணிவிப்பு.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் ஆஜராகாத சாமியார்: சதுர்வேதி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு!

கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தங்கத்தின் விலை புதிய உச்சம்: ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கு விற்பனை!

சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக, சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,880 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது பண்டிகை காலத்தில் நகை வாங்கத் திட்டமிட்டவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.