K U M U D A M   N E W S

பருப்பு வகைகளில் தன்னிறைவு: ரூ.42,000 கோடி திட்டங்களை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அரிசி, கோதுமையில் தன்னிறைவு கண்ட இந்தியா, பருப்பு வகைகளிலும் தன்னிறைவு அடையும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நாளை 'பிரதம மந்திரி தன்-தானய யோஜனா' மற்றும் 'பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம்' ஆகிய முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு.. வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் மும்பையில் சந்தித்து, வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி குறித்தும், இரு தலைவர்களும் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டதுடன், 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறக்க ஒப்புக்கொண்டது முக்கிய முன்னேற்றமாகும் என மோடி தெரிவித்தார்.

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

'கலக்குங்க சார் கலங்குங்க..' நடிகர் சாம்ஸ் தன் பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என மாற்றினார்!

நடிகர் சாம்ஸ் தனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என்று மாற்றியுள்ளார்.

விழுப்புரம் அருகே பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உடல் கருகி பலி!

விழுப்புரம் அருகே நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகிப் பலியான நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்

இந்தியாவின் மிகப் பணக்காரப் பெண்மணி... ஹுருன் தரவரிசையில் ரோஷ்னி நாடார் 3-வது இடம் பெற்று சாதனை!

HCL டெக்னாலஜிஸ் தலைவரான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரூ.2.84 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பெண்மணி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் முதல் முறையாக டாப்-3-க்குள் ஒரு பெண் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

குரூப் 2 தேர்வு: 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர் - TNPSC முக்கிய அறிவுறுத்தல்!

செப். 28 அன்று நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 09:00 மணிக்கு மேல் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை என TNPSC திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 3.71 கோடி ரூபாய் மோசடி! சகோதரிகள் கைது!

லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி நம்பர் பிளேட் காரில் கஞ்சா கடத்தல்: 50 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!

விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.