மத்திய அமைச்சர் ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் விமர்சனம்!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை ப்ளாக்மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க அமைச்சர்கள் குழு இன்று ஒடிசா சென்ற நிலையில் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
திமுக சார்பில் எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.
ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
குன்னப்பட்டு கிராமத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு தொகுதி மறுவரையறை பிரச்சினையை ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றும் அவரது இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை என்றும், இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு
மருத்துவம், பொறியியல் பாடத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.