K U M U D A M   N E W S

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் தொய்வு..ரிதன்யாவின் தந்தை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு

ரிதன்யா வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வரதட்சணையாக கிட்னியை கேட்ட மாமியார்.. மருமகள் அதிர்ச்சி

வரதட்சணையாக பைக், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய மாமியார் வற்புறுத்தியதாக பெண் ஒருவர் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.