K U M U D A M   N E W S

ரூ

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று: பணிகளை மேற்கொள்ள அனுமதி!

தமிழகத்தில் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று பெற ரூ.18 கோடிக்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நீலகிரியில் கனமழை.. மலைப்பயிர்கள் பெரும் சேதம்.. விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

ஐ.பி.எல் சூதாட்டம்: ஒருவர் கைது - ரூ.96 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

கோவையில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ. 50 லட்சம் சொத்து, 46 லட்சம் வங்கி கணக்குகளை முடக்கி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய மர்ம கும்பல்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை ரத்து செய்து தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ. 1.65 லட்சம் திருடிய சைபர் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய 20 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையொப்பத்தைத் தவிர, தற்போது புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சர்பத் ஜிகாத்' சர்ச்சை: பாபா ராம்தேவை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!

ரூஹ் அஃப்சாவுக்கு எதிரான சர்பத்-ஜிஹாத் தொடர்பாக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் வகுப்புவாத அவதூறுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்...பூந்தமல்லி – போரூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றி

பூந்தமல்லி - போரூர் இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி

இந்திய கடற்படையை வலுப்படுத்த 26 ரஃபேல் விமானங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய கடற்படைக்கு பிரான்சிடமிருந்து ரூ.63000 கோடியில் 26 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.