K U M U D A M   N E W S

2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருவதாகவும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ்.. பெங்களூரு மாநகராட்சியின் புதிய திட்டம்

பெங்களூருவில் தெரு நாய்களுக்கு தினம்தோறும் உணவளிக்கும் வகையில் புதிய திட்டத்தை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது.

சிவபெருமானின் அருளைப் பெறும் பிரதோஷ விரதம்.. விரத வழிமுறைகள்!

பிரதோஷம் என்பது இந்து மதத்தில் திரயோதசி திதியன்று சிவபெருமானை வழிபடும் ஒரு விரத முறையாகும். இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு நாட்களில் வருகின்ற திரையோதசித் திதியில் சூரியன் மறைவுக்கு முன் மற்றும் பின் நிகழும் உள்ள நேரத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரத காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

தமிழிசைக்கு அனுமதி, எனக்கு இல்லையா? செல்வப்பெருந்தகை அதிருப்தி

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோயில் கும்பாபிஷேகத்தில், தமிழிசை சௌந்தரராஜனுக்கு சலுகை அளித்ததாகவும், தன்னைத் தடுத்ததாகவும் கூறி அதிகாரிகள் மீது செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை அரசுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா லிபெட்ஸ்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்.. மீட்பு பணிகள் தீவிரம்!

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் இன்று அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், ஆளுநர் இகோர் ஆர்தமோனோவ் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டையில் பிரசவசத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்..உறவினர்கள் திடீர் முற்றுகையால் பரபரப்பு

புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் முற்றுகை

கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

காவல் நிலையத்தில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை..!

ராசிபுரம் அருகே பெண் எஸ்.எஸ்.ஐ காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.