K U M U D A M   N E W S

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

உலகிலேயே முதன்முறையாக... தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ்!

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் செய்யும் வசதி கொண்டுவர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சிறையில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள்.. கைதிகளுக்கிடையே கைகலப்பு!

புழல் சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை காணாமல் போனதால் கைதியை தாக்கிய 7 கைதிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் பராமரிப்பு பணி.. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம்!

காவிரி ஆற்றின் குறுக்கே பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், விசைப்படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி.. வடமாநிலத்தவரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவரை ஊன்றுகோலால் அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னையில் திடீரென பெய்த கனமழை.. நீண்ட நேரமாக வானில் வட்டமடிக்கும் விமானங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..விரைவில் பணிகளுக்கு டெண்டர் கோர திட்டம்

முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.