K U M U D A M   N E W S

தவெகவில் அதிருப்தி..? அறிவாலயத்தில் ஆனந்தம்..? திமுகவின் அடுத்த மூவ்!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிருப்தி நிர்வாகிகளில் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது அறிவாலய வட்டாரத்தில் ஆனந்தத்தை பொங்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த அதிருப்தி நிர்வாகிகளில் பட்டியல திமுக கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது

நான் தான் தலைவர் பாமகவுக்கு தலைவர் - அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்

ராமதாஸ் தனது கொள்கை வழிகாட்டி மட்டுமல்ல - குலதெய்வம் என தெரிவித்துள்ள அன்புமணி, பாமகவுக்கு தானே தலைவர் எனவும் அறிவித்துள்ளார்.

திலகபாமா நீக்கமா? நீடிப்பாரா? யார் தான் பாமக பொருளாளர்? குழப்பத்தில் தொண்டர்கள்!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நிறுவனரும், தலைவரும் மாறி, மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பாமகவின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

படுத்துக் கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பது எப்படி? அப்செட்டிலும் தளராத ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதால் தைலாபுர வட்டாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவைக்கு வருகை தந்த விஜய்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை காண ரசிகர்கள் திரண்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும், 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிர்வாகிகள் புகார் - நழுவி சென்ற Minister Anitha Radhakrishnan திமுகவினர் அதிருப்தி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாக புகார்

அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

மளிகைக்கடையில் தாக்குதல் - பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மளிகைக் கடை உரிமையாளரை தாக்கியதாக பாமக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு