K U M U D A M   N E W S

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையின் புதிய கட்டுப்பாடுகள்...!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னையை நோக்கி மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறை பல புதிய திட்டங்களை விதித்துள்ளது.

வழிப்பறி வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு

ரூ.20 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு

பிரபல நடிகருக்கு கத்திக்குத்து – முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட காவல்துறை

பிரபல நடிகரான சயிஃப் அலிகான் மீது வீடுபுகுந்து கத்தியால் தாக்குதல்

காவலர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு - முதலமைச்சர் அதிரடி

காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

பொங்கல் விற்பனையால் கலை கட்டிய தியாகராய நகர்.. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க சென்னை ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர்.  மெட்ரோ பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகள் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. 

கடத்தலில் 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கு.. காவல், ஐ.டி அதிகாரிகளின் ஜாமின் மனு தள்ளுபடி..!

தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், வருமான வரித்துறை அதிகாரிகளின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் 5-வது நாளாக சோதனை..!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் கோவை, பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கட்டுமான தொழில்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்.

6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

EPS-உறவினர் வீட்டில் 3-வது நாளாக சோதனை

முள்ளாம்பரப்பு பகுதியில் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான RBB நிறுவனத்திலும் சோதனை.