TN District News Today: மாவட்ட செய்திகள் | 09 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 09 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 09 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
சத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதாக குற்றம்சாட்டிய அன்புமணி, உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கவுதமாலா நாட்டில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' மற்றும் 'இதயத்தை திருடாதே' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை அருணா தொடர்பான அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாவின் கணவரும், தொழிலதிபருமான மோகன் குப்தாவின் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டாரா என அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என கூறுவதற்கு திருமாவளவன் யார்? என இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 100 சதவீதம் தொழிலாளர்கள் நாளை வேலைக்கு செல்வதால் பேருந்துகள் ஓடும். எங்களது கூட்டமைப்பில் 23 சங்கங்கள் உள்ளன என அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு
திமுக ஆட்சியில் பட்டியல் இனமக்கள் படும் துன்பத்தைப்பற்றி பேசவேண்டிய விசிக பேசாமல், மௌனம் காக்கிறது என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான அதிமுக ஆட்சியை கொடுக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என இபிஎஸ் பேச்சு