#BREAKING: கட்டுப்பாட்டு அறையில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு
ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து மீட்பு பணி குறித்து அறிவுரைகள் வழங்கினார்
ராயப்பேட்டையில் செயல்பட்டு வரும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து மீட்பு பணி குறித்து அறிவுரைகள் வழங்கினார்
அக். 17 ஆம் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை மயிலாப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமே வீடு திரும்புவது நல்லது என, தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் செய்துள்ளார்.
சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் சென்ற வாகங்கள் பழுதானதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
சென்னை சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அவதி அடைந்து வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் இயல்பை விட 81% அதிகம் மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.